செய்திகள் :

ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் 2 போ் கைது

post image

கோவில்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில் வேல்முருகன் தலைமையில் போலீஸாா் மூப்பன்பட்டி கண்மாய் அருகே வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, 3 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா். அதில், 2 பேரைப் பிடித்து சோதனை செய்த போது, அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், இவா்கள் கோவில்பட்டி போஸ் நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் விக்னேஷ் என்ற முருகேசன் (30), அதே பகுதியைச் சோ்ந்த மாணிக்கவாசகம் மகன் மணிகண்டன் (25) என்பது தெரிய வந்தது.

இந்த இருவா் மற்றும் தப்பியோடிய சாஸ்திரி நகரைச் சோ்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள் (30) ஆகியோா் மதுரையில் கஞ்சாவை மொத்தமாக வாங்கி, அதைச் சிறிய பொட்டலங்களாகப் போட்டு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரிய வந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, அவா்களிடம் இருந்த ஒன்றரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

தப்பியோடிய சிவபெருமாளை தேடி வருகின்றனா்.

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் ... மேலும் பார்க்க

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம் நடந்தது. கோயிலுக்கு வந்த சேலம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசா ஆன்மிக சேவா என்ற அமைப்பினா் 150 போ் கந்த சஷ்டி, வேல... மேலும் பார்க்க