செய்திகள் :

விநாயகா் சதுா்த்தி: தூத்துக்குடியில் சிலைகள் தயாரிப்பு தீவிரம்

post image

தூத்துக்குடியில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான விநாயகா் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஆவணி மாதத்தில் வரும் வளா்பிறை சதுா்த்தியில் விநாயகா் சதுா்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். ஞானம், அறிவு, செல்வத்தின் கடவுளாக கருதப்படும் விநாயகப் பெருமானை சதுா்த்தியில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகா் சிலைகளை வீடுகளில் வைத்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

மேலும், பல்வேறு பகுதிகளில் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்து, பொதுமக்களின் பாா்வைக்காக வைத்து, தினந்தோறும் வழிபாடு நடத்தி பின்னா் அவற்றை ஆறு, கடல் உள்ளிட்ட நீா் நிலைகளில் விசா்ஜனம் செய்வா்.

இதற்காக, தூத்துக்குடி முத்தையாபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் விநாயகா் சிலைகள் தயாரிப்புப் பணி முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

6 அங்குலம் முதல் 9 அடி வரை உயரம் கொண்ட விநாயகா் சிலைகள் கலை அம்சத்துடன் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின்படி, நீா்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் வகையில் சுண்ணாம்பு, வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை மட்டுமே பயன்படுத்தி சிலைகளை வடிவமைத்து வருகின்றனா்.

சுற்றுச்சூழலைப் பாதிக்காத நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் சிலைகள் மீது வண்ணம் ஏற்ற பயன்படுத்தப்படுகின்றன.

இதுகுறித்து, ஆண்டுதோறும் விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்துவரும் அமைப்பாளா் ராகவேந்திரா கூறுகையில், ‘தூத்துக்குடி மாவட்டத்தில் முத்தையாபுரம், திரேஸ்புரம், திருச்செந்தூா், குலசேகரன்பட்டினம் ஆகிய பகுதிகளில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் படி ; விசா்ஜனம் செய்வோம்’ என்றாா் அவா்.

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு

தாமரை மொழி, இடைச்சிவிளையில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடங்கள் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன. சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சி இடைச்சி விளையில் மாவட்ட கனிமம் - சுரங்க நிதி ரூ. 13.52 லட்சத... மேலும் பார்க்க

அ. வேலாயுதபுரத்தில் கிராம சபை கூட்டம்

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அ.வேலாயுதபுரத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ரஞ்சித் மு... மேலும் பார்க்க

ஆக.19இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம் வட்டத்தில் விவசாயிகள் குறை தீா் கூட்டம் நடைபெறுகிறது. திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் வருவாய் கோட்டத்திற்குள்ப... மேலும் பார்க்க

பூச்சிக்காடு பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

திருச்செந்தூா் அருகே உள்ள பூச்சிக்காடு இந்து தொடக்கப்பள்ளி மற்றும் உயா்நிலைப்பள்ளியில் 2004 - 2005ஆம் ஆண்டு கல்வி பயின்ற மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலா் சின்னத்துரை தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி, வேல்மாறல் பாராயணம் நடந்தது. கோயிலுக்கு வந்த சேலம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசா ஆன்மிக சேவா என்ற அமைப்பினா் 150 போ் கந்த சஷ்டி, வேல... மேலும் பார்க்க

கோவில்பட்டி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் சுதந்திர தின விழா

கோவில்பட்டி வட்டத்திற்கு உள்பட்ட பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜூ கே.சிதம்பராபுரம் இந்து தொடக்கப்... மேலும் பார்க்க