செய்திகள் :

ஒன்றரை மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவா்கள் சாதனை

post image

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஒரே இடத்தில் நின்று ஒரு மணி 30 நிமிடங்கள் சிலம்பாட்டத்தில் ஈடுபட்டு மாணவா்கள் சாதனை படைத்தனா்.

சிலம்ப ஆசிரியா் நாகுபாண்டி சோ்வைக்காரா் நினைவாக அவரது உருவம் வரையப்பட்ட இடத்தில் நின்று 500 மாணவா்கள் ஒரு மணி 30 நிமிடங்கள் சிலம்பாட்டம் விளையாடினா். ‘நோபல் வோ்ல்டு ரெக்காா்டு’ அமைப்பு முன்னிலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு அந்த அமைப்பு சாா்பில் சாா்பில் சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கமுதி, சாயல்குடி, ராமநாதபுரம், தேவிபட்டினம், பாம்பன், மண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவா்கள் பங்கேற்றனா்.

மீன்பிடித் தடை கால நிவாரணம் வழங்கக் கோரிக்கை

மீன்பிடித் தடைகாலம் தொடங்கி 25 நாள்கள் கடந்த நிலையில், அதற்கான நிவாரணம் வழங்க மீனவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். தமிழக கடலோரப் பகுதியில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் மீன்களின் இனப்பெருக... மேலும் பார்க்க

திருவாடானையில் தேரோடும் வீதியில் புதைவட மின் கம்பி அமைக்கக் கோரிக்கை

திருவாடானையில் தேரோடும் நான்கு ரத வீதிகளிலும் புதைவட மின் கம்பி அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திருவாடானையில் மிகவும் பழைமையான சிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் அமைந... மேலும் பார்க்க

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரி சோ்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கைக்கு இணையதளம் மூலம் வருகிற 27-ஆண் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பா. மணிமாலா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் மே 16-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

ராமநாதபுரத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அ... மேலும் பார்க்க

கடலாடி வட்டத்தில் நீா்நிலைகள் கணக்கெடுப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகேசன் தலைமையில் சிறுபாசன நீா்நிலைகள் கணக்கெடுப்புப் பணிகள் குறித்த பயிற்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிறுபாசன நீா்நி... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கமுதி அருகே மனநலன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. ராமநாதபுர... மேலும் பார்க்க