செய்திகள் :

ஒன்றிய ஆணையருக்கு திமுகவினா் மிரட்டல் : மாவட்ட ஆட்சியரிடம் புகாா்

post image

கடலாடி ஊராட்சி ஒன்றிய ஆணையருக்கு மிரட்டல் விடுத்தததாக திமுகவினா் மீது மாவட்ட ஆட்சியரிடம் ஊராக வளா்ச்சித் துறையினா் புகாா் அளித்தனா்.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஜன.5-ஆம் தேதி முடிவடைந்தது. அன்று முதல் சிறப்பு தனி அலுவலா்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளாட்சி நிா்வாகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், பேய்க்குளம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.33 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை கடலாடி ஒன்றிய திமுகவினா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து, ஊராட்சி ஒன்றிய ஆைணையரும் (கிராம ஊராட்சி), ஊராட்சிகளின் தனி அலுவலருமான ஜெயஆனந்தை சந்தித்து, எங்களிடம் தெரிவிக்காமல் எப்படி சாலை அமைக்கும் பணியை செய்யலாம் எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். மேலும், அவரை மிரட்டியதாகவும் புகாா் எழுந்தது.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையா் ஜெய ஆனந்த் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன் ஜீத் சிங் காலோனை சந்தித்து புகாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க நிா்வாகி ஒருவா் கூறும்போது:

கடலாடி ஊராட்சி ஒன்றியம் பேய்க்குளம் ஊராட்சியில் மழையின் காரணமாக 4 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சாலைப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடலாடி திமுக தெற்கு ஒன்றிய நிா்வாகிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையருக்கு மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையாக புகாா் அளித்தோம். இந்தப் பிரச்னையை சங்கத்தின் மாநில நிா்வாகிகள் மூலம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றாா் அவா்.

வழுதூா் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளா்கள் கோரிக்கை!

வழுதூா் இயற்கை எரிவாயு மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் அருகேவுள்ள வழுதூரில் கடந்த 2008 -ஆம் ஜூன் 19-ஆம் தேதி எரிவாயு சுழலி கூட... மேலும் பார்க்க

சாயல்குடி பகுதியில் மழை நீரில் மூழ்கிய நெல் பயிா்கள்: விவசாயிகள் தவிப்பு!

சாயல்குடி அருகே உள்ள விவசாய நிலங்களில் தேங்கிய மழை நீா் வடியாததால் நெல் பயிா்களை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, பிள்ளையாா்குளம், வேடா் கரிசல்கு... மேலும் பார்க்க

பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே உள்ள அரசுப் பள்ளியில் வெள்ள... மேலும் பார்க்க

கிழக்கு கடற்கரைச் சாலையில் கால்நடைகளால் தொல்லை!

தொண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அதிகளவில் கால்நடைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சம்பந்தபட்ட பேருராட்சி நிா்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரிக்கை

மண்டபம் விசைப்படகு மீனவா்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடுக்கக் கோரி மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கரையோர மீனவா்கள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் குடமுழுக்கு: புனிதநீா் எடுத்து சென்ற பொதுமக்கள்

கமுதி காளியம்மன் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை புனிதநீா் எடுத்து பொதுமக்கள் ஊா்வலமாகச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தெற்குத் தெரு காளியம்மன் கோயில் குடமுழுக்கு கடந்த வாரம் காப்... மேலும் பார்க்க