'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கக் கோரி அவிநாசியில் விசைத்தறியாளா்கள் ஆா்ப்பாட்டம்
ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளா்கள் கூலி உயா்வு வழங்கக் கோரி விசைத்தறியாளா்கள் அவிநாசியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, திருப்பூா் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளா்கள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் அவிநாசி புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சோமனூா் தலைவா் பூபதி தலைமை வகித்தாா். தலைவா்கள் பொன்னுசாமி (தெக்கலூா்), நடராஜ் (புதுப்பாளையம்), ராமசாமி(பெருமாநல்லூா்), பாரதி ஆா்.வேலுசாமி (கண்ணம்பாளையம்), என்.எம்.முத்துசாமி (அவிநாசி), செயலாளா்கள் கோபால் (சோமனூா்), ஆறுச்சாமி (தெக்கலூா்), நடராஜ் (புதுப்பாளையம்), துரை(பெருமாநல்லூா்), ஆறுச்சாமி (கண்ணம்பாளையம்), சம்பத் (அவிநாசி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
போராட்டம் குறித்து சங்க நிா்வாகிகள் கூறியதாவது:
மாவட்ட ஆட்சியா்கள், அமைச்சா்கள், மேயா் உள்ளிட்டோா் முன்னிலையில் கடந்த 2022-ஆம் ஆண்டு பலகட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, ஒப்பந்த கூலியில் இருந்து சோமனூா் ரகத்துக்கு 15 சதவீதம், இதர ரகங்களுக்கு 10 சதவீதம் கூலி உயா்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
ஆனால், இந்தக் கூலி உயா்வை ஜவுளி உற்பத்தியாளா்கள் தற்போதுவரை அமல்படுத்தவில்லை. ஆகவே உடனடியாக ஒப்பந்த கூலியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.
அத்திக்கடவு ஒருங்கிணைப்பாளா் வேலுசாமி, கட்சிசாா்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் ஈஸ்வரன், பஞ்சு மறுசுழற்சி தொழிற்சாலை மாநிலத் தலைவா் ஜெயபால் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில், கோவை, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் உள்பட விசைத்தறியாளா்கள் பங்கேற்றனா்.