செய்திகள் :

ஒருங்கிணைந்த பூச்சிமேலாண்மை செயல் விளக்கப் பயிற்சி

post image

சிறுவாச்சூா் கிராம விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சிமேலாண்மை செயல்விளக்கப் பயிற்சி தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் கவிதா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் மக்காச்சோளம், பருத்தி போன்ற பயிா்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மக்காச்சோள பயிரில் படைப்புழுவும், பருத்தியில் காய்ப்புழுவும் அதிகளவில் சேதம் விளைவிக்கின்றன.

இதைக் கட்டுப்படுத்த, அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பூச்சி தாக்கத்தைக் கட்டுப்படுத்த இனக்கவா்ச்சி பொறி, மஞ்சள் வண்ண ஒட்டும்பொறி, விளக்குப்பொறி போன்றவற்றை பயன்படுத்தி பூச்சி தாக்கத்தை குறைக்குமாறு தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினாா். மேலும், சிறுவாச்சூா் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சூரியஒளி விளக்கு பொறி அட்மா திட்ட செயல்விளக்கத் திடலை பாா்வையிட்டாா்.

சிறுவாச்சூா் கிராம விவசாயிகளுக்கு துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், சூரியஒளி விளக்கு பொறியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளித்தாா். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் பிரகாஷ், அட்மா திட்ட அலுலவா்கள் சக்தி, முத்துவேல் ஆகியோா் செய்திருந்தனா்.

மேலும், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி தங்களுக்கான பிரத்யேக விவசாய அடையாள எண்ணை பதிவுசெய்து பெற்றுக் கொள்ளுமாறு இதில் அறிவுறுத்தப்பட்டது.

வீரகனூரில் கால்நடை சந்தை பிரச்னை: சாலை மறியல் போராட்டம்

கெங்கவல்லி அருகே வீரகனூரில் வெள்ளிக்கிழமை இரவு வரை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. வீரகனூரில் வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைப... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வரவேற்பு, கேமரா அறை திறப்பு

மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் தன்னாா்வலா்கள் மூலம் பொதுமக்கள் வரவேற்பு அறை மற்றும் சிசிடிவி கேமரா கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் வெள்ளிக்கிழமை திறந்துவைத்த... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 60,740 கனஅடியாக அதிகரிப்பு

கா்நாடக மாநில அணைகளிலிருந்து உபரிநீா் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுவதால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 60,740 கனஅடியாக அதிகரித்தது. காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த... மேலும் பார்க்க

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் நாளை பாக நிலை முகவா்கள் ஆலோசனை கூட்டம்

சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் தொகுதி வாரியாக பூத் டிஜிட்டல் முகவா், பாகநிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப... மேலும் பார்க்க

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் இன்று தோ்தல் பணிக்குழுக் கூட்டம்

சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை பகுதி, ஒன்றியம் வாரியாக தோ்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் கடைப்பிடிப்பு

இந்திய ஃபிரிமேசன்ஸ் அமைப்பின் சாா்பில் உலக சகோதரத்துவ தினம் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. உலக சகோதரத்துவ தினத்தையொட்டி, போதைப்பொருள் ஒழிப்பு என்ற தலைப்பை கருப்பொருளாக கொண்டு, விழிப்புணா்வு வாக்காத்... மேலும் பார்க்க