செய்திகள் :

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்த ஷர்துல்: இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை!

post image

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் 5-ஆம் நாளில் ஷர்துல் தாக்குர் ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. அதிலும் பென் டக்கெட் சதம் அடித்து அசத்தலாக விளையாடி வந்தார்.

இரண்டாவது இன்னிங்ஸில் 54-ஆவது ஒவரில் 3,4-ஆவது பந்துகளில் ஷர்துல் தாக்குர் தனது மேஜிக்கை நிகழ்த்தினார்.

அதுவரை சிறப்பாக விளையாடி வந்த பென் டக்கெட் 149 ரன்களுக்கும் அடுத்து வந்த ஹாரி புரூக் பூஜ்ஜியத்திலும் ஆட்டமிழந்தார்கள்.

இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 269/4 ரன்கள் எடுத்துள்ளது. மழை வந்ததால் தேநீர் இடைவேளை விடப்பட்டது.

இந்தியா வெற்றி பெற 6 விக்கெட்டுகள் தேவை. இங்கிலாந்து வெற்றிபெற 102 ரன்கள் தேவை. பென் ஸ்டோக்ஸ் - ஜோ ரூட் பார்ட்னர்ஷிப்தான் இரு அணிகளுக்குமே ஆட்டத்தை தீர்மானிப்பதாக இருக்கிறது.

ரூட் 14, ஸ்டோக்ஸ் 13 ரன்களும் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். பும்ரா எதாவது செய்து காப்பாற்றினால்தான் உண்டென ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

முதல் டெஸ்ட்: இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் இன்று(ஜூன் 24) காலை தொடங்கியது. ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவதற்குள் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 3... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிராக வரலாறு படைத்த பென் டக்கெட்!

இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் இந்தியாவுக்கு எதிராக புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 சேர்க்க, இங்கிலாந்து 465 சேர்த்தது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்தியா 364 ரன்கள் எடுத்துள்... மேலும் பார்க்க

கோலி, ஸ்மித், ஏபிடி குறித்து சாம் கான்ஸ்டாஸ் கூறியதென்ன?

ஆஸி. இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸ் விராட் கோலியை தனது முன்மாதிரி எனக் குறிப்பிட்டுள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடரில் சாம் கான்ஸ்டாஸ் அறிமுகமானார். இந்தியாவின் நட்சத்திர வீரர் பும்ரா ஓவரில் அதிரடியாக ஆடி உல... மேலும் பார்க்க

குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் தவறு செய்துவிட்டாரா ஷுப்மன் கில்?

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் இடம்பெற்றிருந்தால், அது இந்திய அணிக்கு சாதகமாக இருந்திருக்கும் எனக் கூறப்படுகிறது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயா... மேலும் பார்க்க

விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள்; வெற்றியை நோக்கி நகர்கிறதா இங்கிலாந்து?

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் உணவு இடைவேளையின்போது, இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் தனித்துவமானவர்: கே.எல்.ராகுல்

கே.எல்.ராகுல் ரிஷப் பந்த் குறித்து பேசும்போது, “ரிஷப் பந்த் தனித்துவமானவர்” எனக் கூறியுள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. முதல் இன... மேலும் பார்க்க