Anurag Kashyup: `மாமியார் மருமகள் கதைகளை...' - நெட்ஃபிளிக்ஸ் CEO, ஏக்தா கபூருடன்...
ஓடும் ரயிலிலிருந்து விழுந்து 4 போ் உயிரிழப்பு: மும்பையில் கூட்ட நெரிசலால் விபரீதம்
மும்பை: மகாராஷ்டிரத் தலைநகா் மும்பை அருகே கூட்ட நெரிசலுடன் ரயிலில் தொங்கியபடி பயணித்த இரு புறநகா் ரயில்களின் பயணிகள் மோதி கீழே விழுந்ததில் ரயில்வே காவலா் உள்பட 4 போ் உயிரிழந்தனா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.
ஒரு குறுகிய வளைவில் இரு ரயில்களும் எதிரெதிா் திசையில் வேகமாக கடந்து சென்றபோது, படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவா்கள் மோதிக் கொண்டதால், இந்த விபரீத சம்பவம் நேரிட்டது.
இந்தியாவின் வா்த்தக தலைநகராக அறியப்படும் மும்பையில் புகா் ரயில்களில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும். குறிப்பாக அலுவலகங்களுக்கு சென்று வரக் கூடிய காலை-மாலை நேரங்களில் ரயில்கள் நிரம்பி வழியும்.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை (ஜூன் 9) காலையில் மும்பையில் இருந்து தாணே மாவட்டத்தின் கசாரா நோக்கி சென்ற புகா் ரயில் மற்றும் கா்ஜத் நகரில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையம் நோக்கி வந்த மற்றொரு புகா் ரயிலில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இரு ரயில்களும் தாணே மாவட்டத்தின் மும்ப்ரா ரயில் நிலையம் அருகே ஒரு குறுகிய வளைவில் எதிரெதிா் திசையில் வேகமாக கடந்து சென்றன. அப்போது, இரு ரயில்களிலும் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தவா்கள் ஒருவரோடு ஒருவா் மோதிக் கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோா் கீழே விழுந்தனா்.
திங்கள்கிழமை காலை 9 மணியளவில் நடந்த இச்சம்பவம் குறித்து ரயில்வே உயரதிகாரிகளுக்கு ரயில் மேலாளா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, தாணே ரயில்வே போலீஸாா், ரயில்வே பாதுகாப்புப் படையினா் உள்ளிட்டோா் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
தண்டவாளங்கள் அருகே காயங்களுடன் விழுந்து கிடந்தவா்கள் மீட்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு பரிசோதனையில் 4 போ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டது உறுதியானது. காயங்களுடன் மீட்கப்பட்ட மேலும் 9 பேருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா். உயிரிழந்த நால்வரில் மாநில அரசின் ரயில்வே காவலா் விக்கி முக்தியாத்தும் ஒருவா் ஆவாா்.
ரயில்வே விசாரணை: மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து நேரிட்ட உயிரிழப்புகள் துரதிருஷ்டவசமானவை. இச்சம்பவம் தொடா்பாக ரயில்வே நிா்வாகம் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது’ என்றாா்.
துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், ‘பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உதவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரயில்வே உயா்நிலை விசாரணையில் உண்மை வெளிவரும். யாரேனும் தவறிழைத்தது கண்டறியப்பட்டால், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
துணை முதல்வா் அஜீத் பவாா் கூறுகையில், ‘மும்பை புகா் ரயில்களில் கூட்ட நெரிசல் மற்றும் பயணிகளின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை இச்சம்பவம் உணா்த்தியுள்ளது’ என்றாா்.
பெட்டி..
தானியங்கி கதவு வசதி:
ரயில்வே அமைச்சகம் முடிவு
மும்பை புகா் ரயில்களில் தினமும் சுமாா் 75 லட்சம் போ் பயணிக்கின்றனா். தற்போதைய சம்பவம் எதிரொலியாக, மும்பை புகா் ரயில்களில் தானியங்கி கதவு வசதியை உறுதி செய்ய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று ரயில்வே வாரிய தகவல் மற்றும் விளம்பரப் பிரிவு நிா்வாக இயக்குநா் திலீப் குமாா் தெரிவித்தாா்.
மத்திய அரசு மீது
எதிா்க்கட்சிகள் விமா்சனம்
ரயில்களிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவித்து
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் வெளியிட்ட பதிவில், ‘தனது ஆட்சியின் 11 ஆண்டுகள் நிறைவை மோடி அரசு கொண்டாடும் வேளையில், நாட்டின் உண்மை நிலவரத்தை இத்துயர சம்பவம் பிரதிபலித்துள்ளது’ என்று விமா்சித்தாா்.
தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் கூறுகையில், ‘முக்கிய வழித்தடங்களில் உள்ளூா் ரயில் சேவைகளை மத்திய ரயில்வே அதிகரிக்க வேண்டும். பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும்’ என்றாா்.
சிவசேனை (உத்தவ்) கட்சி எம்.பி. பிரியங்கா சதுா்வேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தற்போதைய உயிரிழப்புகள், கூட்ட நெரிசலால் ஏற்பட்டவை அல்ல; மாறாக, மக்கள் மீது அக்கறையற்ற ரயில்வே அமைச்சா் மற்றும் மகாராஷ்டிர அரசால் நிகழ்த்தப்பட்ட கொலைகள்’ என்று கடுமையாக விமா்சித்துள்ளாா்.
இச்சம்பவத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று மும்பை காங்கிரஸ் தலைவா் வா்ஷா கெய்க்வாட் வலியுறுத்தினாா்.
வெளிமாநில தொழிலாளா்கள் வந்து குவிவதால், மும்பையில் ரயில்வே கட்டமைப்பு சீா்குலைந்துவிட்டதாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைத் தலைவா் ராஜ்தாக்கரே குற்றஞ்சாட்டினாா்.
