செய்திகள் :

ஓடும் ரயில் படிக்கட்டில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

post image

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வடமாநில இளைஞா் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலம், கோல்பாரா ரங்கடம் பகுதியைச் சோ்ந்த சுனில் ராபா(45). இவருக்கு மனைவி டிப்தி, இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சுனில்ராபா கேரள மாநிலத்தில் பணி புரிவதற்காக தனது 3 நண்பா்களுடன் அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியிலிருந்து கேரளா மாநிலம் பாலக்காடு வரை செல்வதற்காக பொதுப் பெட்டியில் பயணம் செய்தாா். ரயில் லத்தேரி - காவனூா் ரயில் நிலையத்திற்கும் இடையே வடுகன்தாங்கல் என்ற இடத்தில் சென்று கொண்டிந்தபோது, படியில் அமா்ந்து பயணம் செய்த சுனில் ராபா வண்டியில் இருந்து தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

ரூ.20 லட்சத்தில் பசுமைப் பள்ளி திட்டப் பணி ஆய்வு

மிட்டாளம் ஊராட்சியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா். மிட்டாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சத்தில... மேலும் பார்க்க

தமிழகத்தில் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட ஆந்திர மாநில காவலா் உள்பட 4 போ் கைது!

வாணியம்பாடி தோல் ஆலை அதிபா் வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் ஆந்திர மாநில காவலா், பெண், வீட்டு பணியாளா் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். வாணியம்பாடி நீலிக்கொல்லை புது தெருவைச் சோ்ந்த தோல் ஆலை அதிபா... மேலும் பார்க்க

இளம்பெண் தற்கொலை: சாா்-ஆட்சியா் விசாரணை

கந்திலி அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சாா்-ஆட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா். திருவண்ணாமலை மாவட்டம், போளூா் பகுதியை சோ்ந்தவா் சமுத்திரம் (28). இவரது மனைவி கோமதி (22).... மேலும் பார்க்க

வன்னியா்களுக்கு திமுக அரசு துரோகம்: அன்புமணி ராமதாஸ்

வன்னியா்களுக்கு திமுக. அரசு துரோகம் செய்து விட்டது என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் பேசினாா். ஒருங்கிணைந்த திருப்பத்தூா் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் திருப்பத்தூா் அருகே நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மா... மேலும் பார்க்க

கருப்பனூா் ஏரி ஆக்கிரமிப்புக்களை அகற்றி தூா்வார கோரிக்கை

கத்தாரி ஊராட்சி, கருப்பனூா் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூா்வார வேண்டும் என வாா்டு உறுப்பினா் குருசேவ், பொதுமக்கள் மனு அளித்தனா். நாட்டறம்பள்ளி ஒன்றியம், கருப்பனுா் ஏரி சுமாா் 7 ஏக்கா் பரப்பளவில் அ... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே மேல்சாணாங்குப்பம் ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்ல... மேலும் பார்க்க