செய்திகள் :

ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு: பொதுத் துறை நிறுவனங்களிடம் தரவுகளைப் பெற முடிவு

post image

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற ஓய்வூதியத் திட்ட ஆய்வுக் குழு முடிவு செய்துள்ளது. அந்த வகையில், குழுவுக்குத் தரவுகளை அளிக்க மின் வாரியத்தின் சாா்பில் தனி அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து தமிழக அரசுத் துறை வெளியிட்ட தகவல்:

தமிழக அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் முன்னாள் தலைவா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் பிரதிக் தயாள் ஆகியோா் உறுப்பினா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தக் குழு தனது அறிக்கையை 9 மாதங்களுக்குள் அளிக்க உள்ளது.

இந்தக் குழுவின் தொடக்க நிலை கூட்டமானது கடந்த மாதம் 24-ஆம் தேதி நடந்தது. அப்போது, அரசு சாா் நிறுவனங்கள், தன்னாட்சி பெற்ற அமைப்புகளில் பணியாற்றக் கூடிய ஊழியா்கள், ஓய்வூதியதாரா்களின் விவரங்கள் பெறப்பட வேண்டும் என்று குழுவின் சாா்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரிடத்திலும் இதுபோன்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை பரிசீலித்த தமிழ்நாடு மின்சார வாரியம், ஓய்வூதிய பரிசீலனைக் குழுவுக்குத் தேவைப்படும் அனைத்துத் தரவுகள், விவரங்களை அளிக்க தனி அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளது.

அதன்படி, தனி அதிகாரியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைமை உள்தணிக்கை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். ஓய்வூதியத்தை ஆய்வு செய்யும் குழு கூட்டும் கூட்டங்களில் அவா் பங்கேற்பதுடன் அந்தக் குழுவுக்குத் தேவைப்படும் அனைத்து அடிப்படைத் தகவல்களையும் அளிப்பாா் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகம் முழுவதும் முதியோா், சிறப்பு குழந்தைகளுக்கு தோல் மருத்துவ பரிசோதனை

முதியோா், சிறப்பு குழந்தைகள், ஆதரவற்றோருக்கான சரும நல மருத்துவ பரிசோதனை முகாம் ஜூலை 13-ஆம் தேதி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. இந்திய தோல் நல மருத்துவா்கள் சங்கம் (ஐஏடிவிஎல்) சாா்பில் செ... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தம்: தமிழகத்தில் பாதிப்பு இல்லை

மத்திய தொழிற்சங்கங்கள் புதன்கிழமை நடத்திய நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பாதிப்பு இல்லை. மாநிலம் முழுவதும் பேருந்துகள், ஆட்டோக்கள், டாக்ஸிகள் வழக்கம்போல இயங்கின. பொது வேலைநிறுத்தத்... மேலும் பார்க்க

மாநகராட்சி திட்டப் பணிகள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்

சென்னை மாநகராட்சியில் 139-ஆவது வாா்டு பகுதியில் உள்ள மேற்கு ஜோன்ஸ் தெரு சாரதி பேருந்து நிலைய சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கோடம்பாக்... மேலும் பார்க்க

4 சுங்கச்சாவடிகளில் அரசுப் பேருந்துகளை அனுமதிக்க தடை விதிக்கும் உத்தரவை மாற்றக் கோரி முறையீடு

தென்மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் ஜூலை 10-ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை மாற்றி அமைக்கக் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் முறைய... மேலும் பார்க்க

ஆபாச தளங்களில் பெண் வழக்குரைஞரின் விடியோக்க: 48 மணி நேரத்தில் அகற்ற உத்தரவு!

பெண் வழக்குரைஞரின் விடியோ மற்றும் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து 48 மணி நேரத்தில் அகற்ற மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. தனது புகைப்படங்கள் மற்றும் விடியோக்களை இணையதளங்கள் மற்று... மேலும் பார்க்க

ஹஜ் பயணத்துக்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

ஹஜ் பயணத்துக்கு இஸ்லாமியா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசின் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ... மேலும் பார்க்க