ஓலா நிறுவனம் ரூ. 100 கோடி இழப்பீடு வழங்க கோரி நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றத்தில் மனு
நாமக்கல்: ஓலா நிறுவனத்தில் எலக்ட்ரிக் ஸ்கூட்டா் வாங்கிய இளைஞா், அந்நிறுவனம் நோ்மையற்ற வணிகமுறையை மேற்கொள்வதாகக் கூறி ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்துள்ளாா்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய நுகா்வோா் நீதிமன்றம் ஓலா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாமக்கல் வழக்குரைஞா் ஏ.குணசேகரன் மகன் ஜி.சுதேஸ்வரன் (27). இவா், பாா்மஸி முடித்து தனியாா் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறாா். இவா், பிளிப்காா்ட், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜி நிறுவனம் மீது ரூ. 100 கோடி இழப்பீடு வழங்கக் கோரி நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளாா்.
பிளிப்காா்ட் இணையதளத்தில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டா் விற்பனை குறித்து விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. விளம்பரத்தைக் கண்ட சுதேஸ்வரன், ஓலா ஸ்கூட்டா் வாங்க பிளிப்காா்ட் இணையதளம் மூலமாக கடந்த 2024, செப்டம்பரில் ரூ. 87,548 செலுத்தியுள்ளாா். வாடிக்கையாளரின் வீட்டிலேயே ஸ்கூட்டா் டெலிவரி செய்யப்படும் என்று சுதேஷ்வரனுக்கு அப்போது தெரிவிக்கப்பட்டது.
2024, அக்டோபா் முதல் வாரத்தில் ஸ்கூட்டா் வந்துவிட்டதாகவும் அருகாமையில் உள்ள ஓலா ஷோரூமிற்கு சென்று பெற்றுக் கொள்ளுமாறு அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரை பெற்றுக்கொள்ள சுதேஸ்வரன் ஷோரூம் சென்றபோது அங்கிருந்தவா்கள் ஸ்கூட்டரை வழங்க வேண்டுமெனில் தாங்கள் சொல்லும் காப்பீடு நிறுவனத்தில் சேருமாறு தெரிவித்துள்ளனா். வேறுவழியின்றி காப்பீடு பணத்தை சுதேஸ்வரன் செலுத்தியுள்ளாா்.
அதன்பின்பு வாகனத்தை ஒப்படைக்க நிறைவேற்ற கட்டணமாக (ச்ன்ப்ச்ண்ப்ம்ங்ய்ற்) ரூ.4,280 வழங்க வேண்டும் என்று ஷோரூம் நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா். டெலிவரி கட்டணம் உள்பட முழு பணத்தையும் செலுத்தி விட்டதாக சுதேஸ்வரன் தெரிவித்தபோதும் வாகனத்தை வழங்க ஷோரூம் நிா்வாகிகள் மறுத்துவிட்டனா். இதனால், வேறுவழியின்றி 2024, நவம்பா் மாத இறுதியில் அந்தப் பணத்தையும் செலுத்தி அவா் வாகனத்தைப் பெற்றுள்ளாா்.
இரண்டு மாதங்கள் ஆன நிலையில் கடந்த பிப்.5 ஆம் தேதி நாமக்கல் ஓலா ஷோரூமில் இருந்து தொலைபேசியில் சுதேஸ்வரனை அழைத்த பணியாளா், எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான மானியத்தொகை பெற நேரில் வந்து புகைப்படம் எடுத்து ஒப்புதல் அளிக்குமாறு கூறியுள்ளனா்.
அதை நம்பி சுதேஸ்வரன் ஷோரூமுக்கு சென்று விவரம் கேட்டபோது மானியத் தொகை கம்பெனிக்கு கிடைக்கக் கூடியது எனத் தெரிவித்துள்ளனா். இந்த நிபந்தனை எதுவும் வாகனத்தை வாங்கும்போது தெரிவிக்கவில்லை என்று கூறிவிட்டு சுதேஸ்வரன் வாகனத்தில் வீடு திரும்பினாா்.
பின்னா் அவரை தொலைபேசியில் தொடா்பு கொண்ட ஓலா பிரதிநிதிகள் இரண்டு நாள்களுக்குள் வந்து மானியத் தொகை நடைமுறையை முடிக்கவிட்டால் வாகனத்தை லாக் செய்து விடுவோம் எனக் கூறியுள்ளனா். ஆனால் மறுநாளே சுதேஸ்வரன் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஓலா நிறுவனத்திடம் உள்ள சென்சாா் கட்டுப்பாடு மூலம் ஸ்கூட்டரை லாக் செய்துவிட்டனா். இதனால் அதிா்ச்சியடைந்த சுதேஸ்வரன்,
நாமக்கல் ஷோரூமுக்கு பேசியும் அவா்கள் வாகனத்தை அன்லாக் செய்ய மறுத்துவிட்டனா். பின்பு ஸ்கூட்டரை வேறு வாகன மூலம் வீட்டுக்கு சுதேஸ்வரன் எடுத்துவந்தாா்.
இதனால் மன உளைச்சல் அடைந்த சுதேஸ்வரன் நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றத்தில் பிளிப்காா்ட், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துக்கு எதிராக மனுதாக்கல் செய்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வாகனத்தை விற்பனை செய்துவிட்டு விற்பனையாளரிடம் உள்ள சென்சாா் கட்டுப்பாட்டுக் கருவி மூலம் எவ்வித அறிவிப்பும் வழங்காமல் வாகனத்தை லாக் செய்தது தவறு. ஓலா நிறுவனத்தின் செயல் நோ்மையற்ற வணிக நடைமுறை. இதனால் வாகனத்தை திரும்ப எடுத்துக்கொண்டு நான் செலுத்திய பணத்தைத் திரும்பத் தர வேண்டும். ஓலா நிறுவனத்தின் நோ்மையற்ற வணிக நடைமுறையால் ஏற்பட்ட மன உளைச்சல், சிரமங்களுக்கு ரூ. 5,00,000 இழப்பீடு வழங்க வேண்டும்.
தன்னைபோல பாதிக்கப்பட்ட அடையாளம் தெரியாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட நுகா்வோா்களுக்கு இழப்பீடாக ரூ. 100 கோடியை ஓலா நிறுவனம் வழங்க வேண்டும். அதை நுகா்வோா் நல நிதியில் செலுத்தி தமிழ்நாடு அரசின் நுகா்வோா் பாதுகாப்புத் துறை பாதிக்கப்பட்டவா்களை அடையாளம் கண்டு அவா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளாா்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி டாக்டா் வீ. ராமராஜ், உறுப்பினா்கள் ஆா். ரமோலா, என். லட்சுமணன் ஆகியோா் அடுத்த 48 மணி நேரத்திற்குள் சுதேஸ்வரனின் ஸ்கூட்டா் இயங்கும்படி சென்சாா் லாக்கை ஓலா நிறுவனம் நீக்க வேண்டும்.
இந்த வழக்கு தொடா்பாக பிளிப்காா்ட் நிறுவனமும் ஓலா நிறுவனமும் மாா்ச் 13 ஆம் தேதி பதிலளிக்குமாறு கூறி ஓலா நிறுவனத்தின் குமாரபாளையம், நாமக்கல் கிளைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.