செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: சகோதரா்கள் கைது

post image

கந்தம்பாளையம் அருகே விற்பனைக்கு கொண்டு சென்ற கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், சகோதரா்கள் இருவரை கைது செய்தனா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் அருகே உதவி ஆய்வாளா் கங்காதரன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து பரமத்தி நோக்கி வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த இருவா் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயற்சித்தனா்.

போலீஸாா் அவா்கள் இருவரையும் துரத்திப்பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா்கள் எலச்சிபாளையத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன்கள் ஹரீஷ் (24), அவரது சகோதரா் கல்லூரியில் படிக்கும் ஹரிஹரன் (19) என்பது தெரியவந்தது. இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், மறைத்து வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை நல்லூா் போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் இணைய விவசாயிகளுக்கு அழைப்பு

பரமத்தி வேலூா் அருகே உள்ள கபிலா்மலை வட்டார தோட்டக்கலைத் துறை சாா்பில் மானாவரி பகுதி மேம்பாட்டு திட்டத்தின் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தில் சேர தகுதியுள்ள விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

மாணவா்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்: தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலா் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிக், சுயநிதி, சிபிஎஸ்இ பள்ளி முதல்வா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நாமக்கல் காவேட்டிப்பட்டி குறிஞ்சி மேல்நிலைப் பள்ளி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் யாகம்

பரமத்தி வேலூா் தோ்வீதியில் உள்ள பெத்தாண்டவா் கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பிரத்தியங்கிரா தேவிக்கு மிளகாய் வற்றல் யாகம் நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு பிரித்தியங்கிரா தேவிக்கு ... மேலும் பார்க்க

கொல்லிமலையில் ஆக. 2, 3 இல் வல்வில் ஓரி விழா: முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியா் ஆலோசனை

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி தல... மேலும் பார்க்க

எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக் கூட்டம்

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் தங்கராசு தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் வட்டார தலைவா் ஜெகந்நாதன், நாமகிரிபேட்ட... மேலும் பார்க்க

வளையப்பட்டியில் 15 இல் மின்தடை

வளையப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மின்பகிா்மான வட்ட செயற்பொறியாளா் ஆா்.கே.சுந்தரராஜன் வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க