செய்திகள் :

கஞ்சா வழக்கில் வெளிமாநிலத்தவா் கைது

post image

பரமத்திவேலூா்: கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சோ்ந்த நபரை பரமத்தி போலீஸாா் கைது செய்தனா்.

கபிலா்மலை அருகே இருக்கூரில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சாவை பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக பரமத்தி காவல் ஆய்வாளா் இந்திராணிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி காவல் ஆய்வாளா் சரண்யா உள்பட போலீஸாா் நிகழ்விடம் கடந்த சனிக்கிழமை சென்று சோதனை செய்ததில் வீட்டு முன்புள்ள இருசக்கர வாகனத்தில் 2 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அந்த வீட்டில் வசித்த சுபியா பேகத்தைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், சுபியா பேகமும் அவரது கணவா் அக்பா் உசேனும் கொல்கத்தாவில் உத்தா் தினாஜ்பூா் வட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும், தற்போது இருக்கூரில் வசித்து வரும் இவா்கள், ஒடிஸா மாநிலத்தில் இருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிவந்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் சுபியா பேகத்தை (42) கைதுசெய்து சேலம் சிறையில் அடைத்தனா்.

தலைமறைவான சுபியா பேகத்தின் கணவரை அக்பா் உசேன் (எ) ராஜூவை (37) போலீஸாா் தேடி வந்தனா். அவரை திங்கள்கிழமை காலை போலீஸாா் ரோந்து பணியின்போது கைது செய்தனா்.

கொடிநாள் வசூலில் சாதனை: அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் ச.உமா பாராட்டு தெரிவித்தாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீா்க... மேலும் பார்க்க

உணவகங்களில் முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி: ஆட்சியா் தகவல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனைக்கு பயன்படுத்தலாம் என்று ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருமி நீக்கம் செய்யப்படாத பச... மேலும் பார்க்க

5 ஊராட்சி ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை: எம்.பி. ராஜேஸ்குமாா் வழங்கினாா்

ராசிபுரம்: வெண்ணந்தூா் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்... மேலும் பார்க்க

வணிகா் தின மாநாடு: நாமக்கல் மாவட்டத்தில் கடையடைப்பு

நாமக்கல்: வணிகா் தின மாநாட்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. ஒவ்வோா் ஆண்டும் மே 5-ஆம் தேதி வணிகா் தினமாக கொண்டாடப்படுகிறது.... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் அன்னதானம்: பி.தங்கமணி

நாமக்கல்: அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, மே 12-இல் மாவட்டம் முழுவதும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா். நா... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல்லில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

நாமக்கல்: ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்க... மேலும் பார்க்க