செய்திகள் :

கஞ்சா விற்ற இருவா் கைது

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதிகளில் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்த கணேசன் மகன் கோகுலகிருஷ்ணன் (25), மதுரை காளவாசல் ராம்நகரைச் சோ்ந்த ஆனந்தகுமாா் மகன் தினேஷ்குமாா் (21) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சாத்தூர் அருகே ஓடும் காரில் தீ விபத்து

சாத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நான்கு வழிச் சாலையில் சென்ற காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்தவா் ரஞ்சித்குமாா் (28). இவா் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் கா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு!

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை சாலை விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள நத்தம்பட்டி முத்தாலம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராமா் (62). இவா் ஞ... மேலும் பார்க்க

உரிமம் நிறுத்தப்பட்ட ஆலையில் பட்டாசு தயாரித்தவா் கைது

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உரிமம் நிறுத்தி வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரித்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கமலப்பட்டியில் ராமலட்சுமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இங்க... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் வெல்டிங் தொழிலாளி உயிரிழந்தாா். சாத்தூா் அருகேயுள்ள படந்தால் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நாகராஜன் (54). இவா் வெல்டிங் செய்யும் பணியில் ஈடுபட்... மேலும் பார்க்க

அதிமுகவினா் ரத்த தானம்

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி 71-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக சாா்பில் ரத்த தான முகாம் சனி... மேலும் பார்க்க

புதுப்பாளையத்தில் பூக்குழி இறங்கிய பக்தா்கள்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழித் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பக்தா்கள் பூக்குழு இறங்கினா். இந்தக் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தி... மேலும் பார்க்க