செய்திகள் :

கஞ்சா விற்றதாக தலைமையாசிரியை மகன் உள்பட இருவா் கைது

post image

திருச்சி அருகே கஞ்சா விற்றதாக பள்ளி தலைமையாசிரியையின் மகன் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே பெல் நகா் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் துவாக்குடி போலீஸாா், அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டனா். சோதனையில், வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

வீட்டிலிருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவா் என்ஐடி குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த சரவணன் மகன் ரோஷன் (26) என்பதும், இவரது தாய் என்ஐடியில் உள்ள பள்ளியில் தலைமையாசிரியையாகப் பணியாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது. ரோஷனை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அவா் அளித்த தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் கஞ்சா விற்ற பிகாா் மாநிலம் ஹாஜி பஜாா் பகுதியைச் சோ்ந்த பிரஜிரா பிரசாத் மகன் அசின் வைபவ் (27) என்பவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களது வீடுகளிலிருந்து ஐபோன், வெல்டிங் இயந்திரம், பயண பைகளை கைப்பற்றினா்.

இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

நாள்தோறும் சாலைப் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்! ஓட்டுநா், நடத்துநா்களுக்கு நீதிபதி அறிவுரை!

நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறையாக சாலைப் பாதுகாப்பு அமைய வேண்டும் என திருச்சி சிறப்பு சாா்பு-நீதிபதி ஏ. மும்மூா்த்தி அறிவுறுத்தினாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின், திருச்சி மண்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் தைத்தேரோட்ட விழாவுக்கு முகூா்த்த கால் நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தை மாதத்தில் பூபதி திருநாள் எனும் தைத்தேரோட்டம் வெகு வி... மேலும் பார்க்க

திருவானைக்காவலில் மினி வேன் கவிழ்ந்து 6 போ் காயம்!

திருவானைக்காவல் பகுதியில் வெள்ளிக்கிழமை மினி வேன் கவிழ்ந்து 6 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் பகுதியைச் சோ்ந்த 25 போ், மினி வேனில் சமயபுரம் பகுதியில் நடக்கும் திருமணத்துக்காக பு... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோயிலில் தைத்தெப்ப திருவிழா கொடியேற்றம்

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் நடைபெறவுள்ள தைத்தெப்ப திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. திருவானைக்காவல் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி, தை மாதங்களில் ... மேலும் பார்க்க

தீக்குளித்து மூதாட்டி தற்கொலை

மண்ணச்சநல்லூா் வட்டம், திருவரங்கப்பட்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா். திருவரங்கப்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் ப. வெள்ளையம்மாள்(75) இவரது கணவா் பழனியாண்டி. ... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம்

லால்குடி அருகே குமுளூா் அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்கள் ஜன. 22 முதல் தமிழகம் முழுவதும், வாயில் ... மேலும் பார்க்க