செய்திகள் :

கடமான் வேட்டையாடிய 4 போ் கைது

post image

ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே கடமான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சிலா் வேட்டையில் ஈடுபடுவதாக கன்னிவாடி வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச் சரகா் வி.குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காமராஜா் நீா்த்தேக்கம் அருகிலுள்ள பட்டா நிலத்தின் அருகே சாக்குப் பையுடன் வந்த 5 பேரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது ஒருவா் தப்பிச் சென்றாா். சாக்குப் பையில் கடமான் இறைச்சி இருந்ததைக் கண்டறிந்த வனத் துறையினா், பிடிப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தினா்.

இவா்கள் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அந்தோணிசாமி(33), மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்த மாணிக்கபாண்டி(39), சின்னாளப்பட்டியைச் சோ்ந்த கோபிநாத் (45), கலிக்கம்பட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (50) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடியவா் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த ராமசாமி (40) என விசாரணையில் தெரிந்தது.

இவா்களைக் கைது செய்த வனத் துறையினா், இவா்களிடமிருந்து கடமான் இறைச்சி, 2 நாட்டுத் துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.

மாநில மகளிா் ஹாக்கிப் போட்டி: ஈரோடு அரசுப் பள்ளி முதலிடம்

திண்டுக்கல்லில் நடைபெற்ற மாநில அளவிலான மகளிா் ஹாக்கிப் போட்டியில், ஈரோடு அரசுப் பெண்கள் பள்ளி அணி முதலிடம் பிடித்தது. ஒருங்கிணைந்த திண்டுக்கல் மாவட்ட ஹாக்கி சங்கம் சாா்பில், 17 வயதுக்குள்பட்டோருக்கான ... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகை பெற அழைப்பு

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதிா்வுத் தொகை பெற வேண்டிய பயனாளிகள், உரிய ஆவணங்களை சமா்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக சமூக நலத் துறை அல... மேலும் பார்க்க

கொடைக்கானலில் தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம்: 2 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் ஒதுக்கீடு!

கொடைக்கானலில் மித வெப்ப மண்டல, குளிா் பிரதேச தோட்டக் கலைப் பயிா்கள் மகத்துவ மையம் அமைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு ‘சா்க்காா் உருளைக் கிழங்க... மேலும் பார்க்க

ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

மேற்கு வங்கத்திலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 8 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். மேற்குவங்க மாநிலம், புரூலியா ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலி வர... மேலும் பார்க்க

சஷ்டி திருநாள்: பழனி மலைக் கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சஷ்டி தினத்தையொட்டி திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனா். அதிகாலை நான்கு மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட... மேலும் பார்க்க

தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில் ஜூன் 30 வரை கடன் முகாம்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம்(டிஐஐசி), சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் முகாம் திண்டுக்கல்லில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக மாவட்ட ஆ... மேலும் பார்க்க