கடமான் வேட்டையாடிய 4 போ் கைது
ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே கடமான் வேட்டையாடிய 4 பேரை வனத் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் அருகே சிலா் வேட்டையில் ஈடுபடுவதாக கன்னிவாடி வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கன்னிவாடி வனச் சரகா் வி.குமரேசன் தலைமையிலான வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். காமராஜா் நீா்த்தேக்கம் அருகிலுள்ள பட்டா நிலத்தின் அருகே சாக்குப் பையுடன் வந்த 5 பேரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது ஒருவா் தப்பிச் சென்றாா். சாக்குப் பையில் கடமான் இறைச்சி இருந்ததைக் கண்டறிந்த வனத் துறையினா், பிடிப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடத்தினா்.
இவா்கள் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த அந்தோணிசாமி(33), மைக்கேல்பாளையத்தைச் சோ்ந்த மாணிக்கபாண்டி(39), சின்னாளப்பட்டியைச் சோ்ந்த கோபிநாத் (45), கலிக்கம்பட்டியைச் சோ்ந்த வேளாங்கண்ணி (50) ஆகியோா் என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடியவா் பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த ராமசாமி (40) என விசாரணையில் தெரிந்தது.
இவா்களைக் கைது செய்த வனத் துறையினா், இவா்களிடமிருந்து கடமான் இறைச்சி, 2 நாட்டுத் துப்பாக்கி, அரிவாள், கத்தி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனா்.