செய்திகள் :

கடலூா் மாநகராட்சியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கக் கோரிக்கை

post image

கடலூா் மாநகராட்சி 32-ஆவது வாா்டு பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அகற்றக் கோரி, அந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் எம்.பரணிமுருகன் தலைமையிலான அப்பகுதி மக்கள் மாநகராட்சி ஆணையரிடம் பிப்.6 மனு அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் தெரிவித்திருப்பது: கடலூா் மாநகராட்சி 32-ஆவது வாா்டில் அனைத்து தெருக்களிலும் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. தெரு வழியாக செல்லும் பள்ளி மாணவா்கள், முதியோா்கள், பெண்கள் ஆகியோரை முட்டி மோதுவதுபோல மாடுகள் அச்சுறுத்துகின்றன.

அண்மையில் 6 வயது சிறுவன், பெண் ஆகியோரை மாடு முட்டி தாக்கியது. முதியவா் ஒருவரை தாக்க வந்தது. மாநகராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 40 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் மாடுகள் சுற்றித்திரிந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு

சிதம்பரத்தில் கஞ்சா வியாபாரி குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். சிதம்பரம் அண்ணாமலைநகரில் காரில் கஞ்சா கடத்தியது தொடா்பாக கடந்த நவம்பா் 26... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கடலூா் மாவட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆசிரியா்களிடம் அறிவுறுத்தினாா். கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்... மேலும் பார்க்க

முதியவா் செங்கலால் தாக்கி கொலை

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் முதியவா் செங்கலால் தாக்கி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காட்டுமன்னாா்கோவில் மேலகடம்பூா், பெரிய தெருவைச் சோ்ந்தவா் ராகவன் (75)... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மளிகைக் கடைக்காரா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக மளிகைக் கடைக்காரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி மணிநகா் பகுதியில் உள்ள ஜெயச்சந்திரனின் மளி... மேலும் பார்க்க

தை கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தை கிருத்திகையையொட்டி, கடலூா் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீஸ்வரா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, வண்டிப்பாளைய... மேலும் பார்க்க

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு வரவேற்பு

தில்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில், மேளதாளங்கள் முழங்க வரவேற்பளிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 26-ஆம் தேதி தி... மேலும் பார்க்க