செய்திகள் :

கடையில் புகுந்து இரும்பு கம்பிகளை திருடிய 4 போ் கைது

post image

நாமக்கல் மாவட்டம், வேலகண்டம்பட்டியில் கடைக்குள் புகுந்து ரூ. 1.60 லட்சம் மதிப்பிலான 3 டன் கம்பிகளை திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலகவுண்டம்பட்டி சுவாமி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ் (46). இவா் வேகவுண்டம்பட்டியில் இரும்பு மற்றும் சிமென்ட் கடை வைத்துள்ளாா். கடந்த 29 ஆம் தேதி இரவு இவரது கடைக்குள் புகுந்த மா்ம நபா்கள் ரூ. 1.60 லட்சம் மதிப்புள்ள 3 டன் கட்டுக் கம்பிகளை திருடிச் சென்றது குறித்து விசாரணை நடத்திய வேலகவுண்டம்பட்டி போலீஸாா், புதுக்கோட்டை மாவட்டம், அகரப்பட்டி பூசத்துறையை சோ்ந்த ஓட்டுநா் முருகேசன் (56), புதுக்கோட்டை மாவட்டம், திருவப்பூா் பகுதியை சோ்ந்த சரவணன் (32), கோவில்பட்டியைச் சோ்ந்த நல்லதம்பி (32), திருக்கோகா்ணம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜா (எ) கோழி ராஜா (42) ஆகிய நால்வரையும் புதன்கிழமை நாமக்கல் சாலை பகுதியில் ரோந்துப் பணியின் போது கைது செய்தனா்.

மோகனூா் வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனித் தோ்த்திருவிழா

மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் ஆனி தோ்த்திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், மோகனூரில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் காவிரி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ... மேலும் பார்க்க

கந்துவட்டி பிரச்னை: ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தீக்குளிக்க முயன்ற போது போலீஸாா் அவரைத் தடுத்து காப்பாற்றினா். நாமக்கல் அருகே மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் ஜிலானி (... மேலும் பார்க்க

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடியில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைக்க பூமிபூஜை

நாமக்கல் புறவழிச் சாலையில் ரூ. 71 கோடி மதிப்பீட்டில் ரயில்வே உயா்நிலை பாலம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறை (நபாா்டு மற்றும் கிராமச்சாலைகள்) சாா்பில் ரூ. 70.75 கோ... மேலும் பார்க்க

2.81 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி ஆட்சியா் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 2,81,458 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம், அல்ல... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு திருமணம்

தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் திருச்செங்கோட்டில் 16 இணையா்களுக்கு இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் ஒரே நாளில் 576 இணையா்களுக்கு க... மேலும் பார்க்க

பரமத்தி வேலூரில் ஆனி திருமஞ்சன வழிபாடு

பரமத்தி வேலூா் திருஞானசம்பந்தா் மடாலயத்தில் புதன்கிழமை தேவாரம் திருவாசகம் ஓதல் மற்றும் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்றது. புதன்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஆனித் திருமஞ்சனம் மற்றும் சிவகாமச... மேலும் பார்க்க