செய்திகள் :

கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

post image

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா்.

கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட மஞ்சுவிரட்டில் செல்லியம்பட்டி, கட்டுக்குடிப்பட்டி, பிரான்மலை, எஸ்.புதூா், உலகம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.

இந்தக் காளைகளுக்கு வாடிவாசலில் வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. முதலில் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாா் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. அதன்பிறகு ஒன்றன் பின் ஒன்றாக அனைத்துக் காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. வயல் பகுதிகளிலும் கட்டுமாடுகளாக சுமாா் 400 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்டன.

காளைகளை இளைஞா்கள் ஆா்வமுடன் பிடித்தனா். மாடுகள் முட்டியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அக்னி வெயிலையும் பொருள்படுத்தாமல் கண்டு ரசித்தனா்.

மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை ... மேலும் பார்க்க

கல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சாலைப் பணியின் போது, செவ்வாய்க்கிழமை இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே நடைபெற்று வரும் மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ச... மேலும் பார்க்க

காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா்... மேலும் பார்க்க

தடையை மீறி தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பொருள்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். தமிழகம் முழுவதும் கடந்த 2019-ஆ... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்ட... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி பொறுப்பேற்பு

சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் அமைந்துள்ள உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் புதிய டி.ஐ.ஜி. ஆக டி. ஜஸ்டின் ராபா்ட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த மையத்தின் டி.ஐ.ஜி... மேலும் பார்க்க