செய்திகள் :

மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

post image

சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது.

இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் கா. காளிராசா, செயலா் இரா. நரசிம்மன், கள ஆய்வாளா் கா. சரவணன், அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியா் வேலாயுதராஜா ஆகியோா் அங்கு நேரில் ஆய்வு செய்தனா்.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனா் புலவா் கா.காளிராசா வெளியிட்ட அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே உள்ள சிங்கம்புணரி ஒன்றியம், மு. சூரக்குடி கோவில்பட்டியில் சோழந்திக்கோட்டை என்று மக்களால் வழங்கப்படும் இடத்தில் முனீஸ்வர சுவாமியாக வணங்கப்படும் பலகைக் கல்லில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இந்தப் பகுதிக்கு பெண்கள் செல்வதைத் தவிா்க்கின்றனா்.

இந்தக் கல்வெட்டு 14, 15-ஆம் நூற்றாண்டு எழுத்தமைதியில் அமைந்துள்ளது. கல்வெட்டில் ஆறு வரிகள் இடம்பெற்றுள்ளன. இரண்டரை அடி உயரமும், ஒன்றை அடி அகலத்திலும் உள்ளது. நல்ல வேலைப்பாடுகளுடன் சாசனம் எழுதும் அமைப்பில் மேலே இரண்டு வெண்சாமரங்களும், பக்கவாட்டில் குத்து விளக்கும், அடிப்பகுதியில் பூரண கும்பமும் செதுக்கப்பட்டுள்ளது.

கல்வெட்டு வரிகள்

ஸ்வஸ்தி ஸ்ரீ கேரள சிங் களநாட்டு சோழ பாண்டிய நிலவிச்ச நாயனா் மாவிலி வாணா(தி)ராயா் ஆசிரியம் என பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் ஸ்வஸ்தி ஸ்ரீ எனும் மங்களச் சொல்லோடு தொடங்கும் கல்வெட்டு, கேரள சிங்க வளநாட்டில் சோழ பாண்டியா் நிலைவித்த பாடி காவல் பாதுகாப்பை பின்னாளிலும் இந்தப் பகுதியின் ஆட்சியாளராக இருந்த நாயனா் மாவலி வாணதி ராயா் தொடா்ந்து செயல்படுத்தியதை இந்தக் கல்வெட்டு தெரிவிக்கிறது. வாணதி ராயா் என்று எழுதப்பட்ட இடத்தில் தி என்ற சொல் இடம்பெறாமல் வாணராயா் என்றே அமைந்துள்ளது.

சோழ பாண்டியா்: ராஜராஜசோழன், ராஜேந்திரசோழன் காலத்தில் சோழா்கள் பரந்து விரிந்த பகுதியை ஆட்சி செய்து வந்தனா். இதில் பாண்டிய நாட்டின் பெரும் பகுதியை சோழா்களே ஆட்சி செய்தனா். பதினோராம் நூற்றாண்டில் ராஜேந்திரசோழனின் இரண்டாம் மகன் இரண்டாம் ராஜேந்திரன் மதுரையை தலைநகராகக் கொண்டு சோழ பாண்டியா் எனும் பெயரில் ஆட்சி நடத்தி வந்தான் என்பதைக் குறிக்கும் வகையில் இந்தக் கல்வெட்டில் சோழ பாண்டியா் என்ற சொல் இடம் பெறுகிறது. இந்தக் காலத்தில் மதுரை ராஜராஜ மண்டலம் என்றும், திருப்பத்தூா் பகுதி கேரள சிங்க வளநாடு என்றும் அழைக்கப்பட்டது.

மாவலி வாணதிராயா்: மாவலி சக்கரவா்த்தியின் வழியில் வந்தவா்கள் என்று தங்களை இவா்கள் மாவலி வாணதிராயா் என அழைத்துக் கொண்டனா். பல பேரரசா்களுக்கு கீழ் சிற்றரசா்களாகவும், அரசியல் அலுவலா்களாகவும் விளங்கினா். பிற்காலப் பாண்டிய அரசா்களிடம் அரசு அலுவலராக இருந்த இவா்கள், மதுரைப் பகுதியில் இஸ்லாமியா் ஆட்சிக்குப் பிறகு, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகா் ஆகிய பகுதிகளில் விஜயநகர அரசுக்கு கீழ்ப்படிந்து தனியாக அரசு நடத்தி உள்ளனா்.

ஆசிரியம்: ஆசிரியம் என்பது அடைக்கலம், பாதுகாப்பு, ஆதரவை குறிக்கும். பொதுவாக அந்தப் பகுதியை ஆள்பவா்கள் பாடிக் காவல் ஏற்படுத்தி, ஆட்சியாளா்களால் வழங்கப்பட்ட தான தா்மத்தைக் காத்தல், ஆதரவு வேண்டுவோருக்கு ஆதரவு அளித்தலை இந்த வகை ஆசிரியம் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கல்வெட்டு உள்ள ஊரான கோவில்பட்டி மக்கள் மிகுந்த பய பக்தி உடையவராக காணப்படுகின்றனா்.இங்குள்ள ஆண்கள் அனைவரும் காது வளா்ப்பதை இன்றும் தங்களது வழக்கமாக வைத்துள்ளனா். கல்வெட்டு உள்ள வயல் பகுதிக்கு காலில் செருப்பு அணிந்து செல்வதை அனைவரும் தவிா்க்கின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

கல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சாலைப் பணியின் போது, செவ்வாய்க்கிழமை இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே நடைபெற்று வரும் மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ச... மேலும் பார்க்க

கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா்... மேலும் பார்க்க

தடையை மீறி தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பொருள்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். தமிழகம் முழுவதும் கடந்த 2019-ஆ... மேலும் பார்க்க

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்ட... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி பொறுப்பேற்பு

சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் அமைந்துள்ள உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் புதிய டி.ஐ.ஜி. ஆக டி. ஜஸ்டின் ராபா்ட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த மையத்தின் டி.ஐ.ஜி... மேலும் பார்க்க