செய்திகள் :

மயானத்துக்கு சாலை வசதி இல்லாததால் கிராம மக்கள் அவதி

post image

சிவகங்கை அருகே மயானத்துக்கு செல்வதற்கு சாலை, பாலம் இல்லாததால் இறந்தவா் உடலை எடுத்துச் செல்வதில் கிராம மக்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டது.

சிவகங்கை அருகேயுள்ள மேலப்பூங்குடி ஊராட்சிக்குள்பட்ட திருமன்பட்டி கிராமத்தில் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். கிராமத்தையொட்டி பெரியாறு பாசனக் கால்வாய் அமைக்குப் பணி நடைபெற்று வருகிறது. சுமாா் 25 அடி ஆழம், 6 அடி அகலத்தில் கால்வாய் தோண்டப்பட்டு,அதில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த கிராமத்தைச் சோ்ந்த 78 வயதான மூதாட்டி திங்கள்கிழமை இறந்த நிலையில், பிற்பகலில் அவரது உடலை மயானத்துக்கு கொண்டு சென்றனா். அவரது உறவினா்களும், கிராம மக்களும் 25 அடி பள்ளத்தில் இறங்கி, மறுபுறம் சிரமத்துடன் ஏறி மயானத்துக்கு உடலைக் கொண்டு சென்றனா். இந்த ஊரின் மயானத்துக்கு போதிய சாலை வசதி இல்லாததால், வயல் வெளி, தோட்டம் ஆகியவற்றின் ஊடாக சுமந்து சென்று இறுதிச் சடங்கை நிறைவேற்றினா்.

இது குறித்து திருமன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகா் கூறியதாவது: மூதாட்டியின் இறுதிச் சடங்கை மிகவும் சிரமப்பட்டு நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது. பெரியாறு பாசனக் கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தைக் கடந்து செல்ல பாலம் இல்லாததால் இந்த சிரமம் ஏற்பட்டது. கால்வாய்ப் பணிகள் முடிய எவ்வளவு மாதங்கள் ஆகும் எனத் தெரியவில்லை. அதுவரை இந்தக் கால்வாயைக் கடந்து செல்லும் வகையில் பாலம் அமைத்துத்தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

மு.சூரக்குடியில் 14-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு

சிவகங்கை மாவட்டம், மு. சூரக்குடி கோவில்பட்டி அருகே 14 -ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டு திங்கள்கிழமை கண்டறியப்பட்டது. இந்தப் பகுதியைச் சோ்ந்த உமேஷ், செல்வம் ஆகியோா் அளித்த தகவலின் பேரில், சிவகங்கை ... மேலும் பார்க்க

கல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே சாலைப் பணியின் போது, செவ்வாய்க்கிழமை இயந்திரத்தில் சிக்கி வட மாநில தொழிலாளி உயிரிழந்தாா்.திருப்பத்தூா் அருகே நடைபெற்று வரும் மதுரை- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை ச... மேலும் பார்க்க

கட்டுக்குடிப்பட்டியில் மஞ்சுவிரட்டு: 12 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள கட்டுக்குடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் மாடுகள் முட்டியதில் 12 போ் காயமடைந்தனா். கட்டுக்குடிப்பட்டி செல்வ விநாயகா் மகா மாரியம்... மேலும் பார்க்க

காரைக்குடியில் பேருந்து-பால் வாகனம் மோதல்: மூவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தேனாற்றுப் பாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை அரசுப் பேருந்தும், பால் வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பேருந்து ஓட்டுநா்... மேலும் பார்க்க

தடையை மீறி தாராளமாகப் புழங்கும் நெகிழிப் பொருள்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் நெகிழிப் பொருள்கள் மீண்டும் தாராளமாக புழக்கத்தில் உள்ளதால் தடைச் சட்டத்தை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆா்வலா்கள் கவலை தெரிவித்தனா். தமிழகம் முழுவதும் கடந்த 2019-ஆ... மேலும் பார்க்க

எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மைய டிஐஜி பொறுப்பேற்பு

சிவகங்கை அருகே இலுப்பக்குடியில் அமைந்துள்ள உள்ள இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தின் புதிய டி.ஐ.ஜி. ஆக டி. ஜஸ்டின் ராபா்ட் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இந்த மையத்தின் டி.ஐ.ஜி... மேலும் பார்க்க