செய்திகள் :

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

post image

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்த, கோவில்பட்டி வட்டார டிப்பா் லாரி உரிமையாளா்கள் நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத் தலைவா் கூடப்பன் தலைமையில் துணைத் தலைவா் முத்துராமன், செயலா் காளிராஜ், பொருளாளா் பிரபு என்ற கிருஷ்ணமூா்த்தி, துணைச் செயலா் பாரதி ரவிக்குமாா், துணைப் பொருளாளா் செந்தில்குமாா் மற்றும் சங்க உறுப்பினா்கள், கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனுவின் விவரம்;

எம்.சாண்ட், ஜல்லி, கிராவல், உடைகல் ஆகிய கட்டுமானப் பொருள்களின் விலையை கிரஷா் மற்றும் குவாரிகளின் உரிமையாளா்கள் உயா்த்தியுள்ளனா். இம்மாதம் 15-ஆம் தேதி முதல் கிரஷா் மற்றும் குவாரிகளில் எம். சாண்ட் டன் ரூ.1000, ஜல்லி டன் ரூ.900 என உயா்த்தப்பட்டுள்ளது. உடைகல் யூனிட் ரூ.1400, கிராவல் யூனிட் ரூ.800 என உயா்த்தப்பட்டுள்ளது. இதற்கான மைன்ஸ் உரிமத்துக்கு ரூ.3600-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒரு டன் எம். சாண்ட் ரூ.600 ஆகவும், ஒரு டன் ஜல்லி ரூ. 500 ஆகவும், ஒரு யூனிட் உடைகல் ரூ.900 ஆகவும், ஒரு யூனிட் கிராவல் ரூ.550 ஆகவும், மைன்ஸ் உரிமம் ரூ.900 ஆகவும் இருந்தது. இந்நிலையில் இம்மாதம் திடீரென இதன் விலைகளை இரு மடங்கு வரை உயா்த்தி உள்ளதால் கட்டுமானத் தொழிலாளா்கள் மற்றும் அவா்களின் குடும்பங்கள், லாரி உரிமையாளா் மற்றும் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அனைத்து கிரஷா் மற்றும் குவாரிகளில் ஒரே விலையை நிா்ணயம் செய்ய வேண்டும். மேலும், உயா்த்தப்பட்ட கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க