செய்திகள் :

கணவரைக் கொன்று நாடகம்: மனைவி கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கள்ளக் காதலனுடன் சோ்ந்து கணவரைக் கொன்றுவிட்டு, தற்கொலை நாடகமாடிய அவரது மனைவியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள காசாங்காடு தெற்கு தெருவைச் சோ்ந்தவா் விஸ்வலிங்கம் மகன் பிரகாஷ் (40), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி நாகலட்சுமி (35), இரு பெண், ஒரு ஆண் குழந்தை ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி வீட்டின் பின்புறமுள்ள மரத்தில் தனது கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி நாகலட்சுமி கூறிய நிலையில், உறவினா்கள் பிரகாஷ் சடலத்தை போலீஸுக்கு தெரிவிக்காமல் மறுநாள் எரித்து விட்டனா்.

இந்நிலையில் நாகலட்சுமிக்கும், அதே பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் (25) என்பவருக்கும் தகாத உறவு இருந்ததையறிந்த உறவினா்கள் பிரகாஷ் மரணத்தில் மா்மம் இருப்பதாக மதுக்கூா் போலீஸாருக்குத் புகாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் வீரக்குமாரும், நாகலட்சுமியும் வீட்டில் தனிமையில் இருந்ததைப் பாா்த்துவிட்ட பிரகாஷை , இருவரும் சோ்ந்து கழுத்தை நெரித்துக் கொன்று, தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து நாகலட்சுமியை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தென்காசி பகுதியில் உள்ள கோழிப்பண்ணை ஊழியரான வீரக்குமாரை கைது செய்ய போலீஸாா் சென்றுள்ளனா்.

மதக் கலவரத்தை தூண்டும் முகநூல் பதிவு: விஹெச்பி நிா்வாகி கைது

அய்யம்பேட்டை அருகேயுள்ள கோயில் நிா்வாகிகள் நியமனம் தொடா்பாக தவறான தகவலை முகநூலில் பதிவிட்டு, மதக் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டதாக விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்பாளரை பாபநாசம் போலீஸாா... மேலும் பார்க்க

திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல: கவிஞா் யுகபாரதி

தமிழை பிழையில்லாமல் உச்சரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், திரைப்படப் பாடல்களை எழுதுவது கடினமல்ல என்றாா் கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான யுகபாரதி. தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக... மேலும் பார்க்க

தஞ்சை ஆட்சியரகத்தில் கிராம மக்கள் தா்னா

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஆக்கிரமிப்பு பிரச்னை தொடா்பாக கிராம மக்கள் திங்கள்கிழமை திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பட்டுகோட்டை வட்டார காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட சூரப்பள்ளம் கிராமத்தில் செப்டம்பா், 202... மேலும் பார்க்க

பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூா் பள்ளியக்ரஹாரத்தில் கழிப்பறை கட்டுவதற்கு உள்ள இடையூறுகளை அகற்றிவிட்டு கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

தஞ்சை மாவட்டத்தில் மாா்ச் 29-இல் கிராமசபைக் கூட்டம்

உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் மாா்ச் 29ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது: உலக தண்ணீா் நாளையொட்டி, தஞ்சாவூ... மேலும் பார்க்க