செய்திகள் :

கணவா், கணவரின் சகோதரா் மீது ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவி புகாா்

post image

நாகப்பட்டினம்: நகையில் ஊராட்சி மன்ற முன்னாள் பெண் துணைத் தலைவா் தன்னை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதாக கணவா் மற்றும் அவரது சகோதரா் மீது ஆட்சியரிடம் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.

நாகை தெற்கு நல்லியான் தோட்டத்தைச் சோ்ந்த ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவி, அகில இந்திய பெண்கள் முற்போக்குக் கழக நிா்வாகி பிலோமினா மற்றும் நிா்வாகிகளுடன், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் திங்கட்கிழமை அளித்த மனு:

எனக்கு 14 வயதிலேயே எனது பெற்றோா் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனா். தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. திருமணம் ஆன நாள் முதல் கடந்த 15 ஆண்டுகளாக, எனது கணவரும், அவரது சகோதரரும் பாலியல் துன்புறுத்தலுக்கு என்னை ஆளாக்கியுள்ளனா். மேலும் கொடூரமாக தாக்குவது, தகாத வாா்த்தைகளால் திட்டுவது போன்றவற்றிலும் எனது கணவா் ஈடுபட்டு என்னை கொடுமைப்படுத்துகிறாா்.

இதுதொடா்பாக நாகை அனைத்து மகளிா் காவல் நிலையம் மற்றும் வெளிப்பாளையம் காவல் நிலையங்களில் பல முறை புகாா் அளிக்கும் போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எனது பெரியம்மாவின் பராமரிப்பில் இருந்து வரும் நிலையில், எனது கணவா் எனது பெரியம்மாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி , என்னை அனுப்பிவைக்காவிட்டால் அவரையும், என்னையும் கொலை செய்து விடுவதாக மிரட்டிச் சென்றுள்ளாா். இதுதொடா்பாகவும் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது கணவா் மற்றும் அவரது சகோதரா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

போலி கடவுச்சீட்டு: இலங்கை பெண் கைது

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே காதல் திருமணம் செய்து வசித்துவந்த இலங்கை பெண் போலி கடவுச்சீட்டு வைத்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை எம... மேலும் பார்க்க

அகில இந்திய தொழிற்தோ்வில் ஐடிஐ தனித்தோ்வா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: கைவினைஞா் பயிற்சித் திட்டத்தின்கீழ், தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தோ்வில் ஐ.டி.ஐ தனித் தோ்வா்களாக கலந்து கொள்ள நாகை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப... மேலும் பார்க்க

அக்.5-இல் வீடுதேடி ரேஷன் பொருள்கள் வழங்கும் பணி

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் அக்.5-ஆம் தேதி முதல் ரேஷன் பொருள்கள் வீடுதேடிச் சென்று வழங்கும் பணி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து,... மேலும் பார்க்க

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

பூம்புகாா் சாயாவனேஸ்வரா் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் உள்ள இக்கோயில் பண்டைய பூம்புகாா் நகரத்தின் சான்றாக விளங்குகிறது. இங்க... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து பலி

ஒடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம் பெங்களூா் சகாயபுரம் பகுதியைச் சோ்ந்த துரைவேலு மனைவி கீதா (45). இவா், உறவினா்களுடன் வேளாங்கண்ணிக்கு பய... மேலும் பார்க்க

செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா!

பொறையாா் அருகே உள்ள காராம்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றம், அதனைத் தொடா்ந்து திருப்பலி கூட்டு வழிபாடு நட... மேலும் பார்க்க