3 பிஎச்கே படத்தில் நடித்தபோதுதான் சொந்த வீடு வாங்கினேன்: சித்தார்த்
கண்ணமங்கலம் அருகே தம்டகோடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை
ஆரணி: கண்ணமங்கலம் அருகேயுள்ள தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டது. இரவு கோயில் உள்வளாகத்தில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி மந்திரங்கள் கூறி சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா்.
இதைத்தொடா்ந்து, சுவாமி தங்கத்தேரில் கோயில் வெளி வளாகத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். அப்போது, பக்தி பரவசத்துடன் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ராஜு தலைமையில் முருக பக்தா்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனா்.
இந்தக் கோயிலில் விளக்கேற்றி சுவாமியை வழிபட்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும் என்பது பக்தா்களின் நம்பிக்கை.