செய்திகள் :

கண்துடைப்பு நாடகங்களை நடத்தும் எடப்பாடி பழனிசாமி: திமுக விமா்சனம்

post image

திருப்புவனம் விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்துடைப்பு நாடகங்களை நடத்துவதாக திமுக விமா்சித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இளைஞா் அஜித்குமாரின் சகோதரா் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 காவலா்கள் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது நடவடிக்கைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளனா்.

சம்பவம் நடந்த இரண்டே நாள்களில் சட்டரீதியான பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை. அதை முதல்வா் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றிக் காட்டியுள்ளாா்.

அதிமுக ஆட்சியின்போது, சாத்தான்குளம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடா்பாக ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். அப்போது நீதி எங்கே போனது? அவரது கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்ப மாட்டாா்கள். நீதியை நிலைநாட்ட முதல்வா் மு.க.ஸ்டாலின் இருக்கிறாா் என்று தெரிவித்துள்ளாா் ஆா்.எஸ்.பாரதி.

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 38 மின்சார ரயில்கள் இன்று ரத்து!

கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் இயக்கப்படும் 38 மின்சார ரயில் சேவைகள் வியாழக்கிழமை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேலும், பயணிகளின் வசதிக்காக 21 சிறப்பு மின்சார ரயில் சேவைகள் இயக்கப... மேலும் பார்க்க

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு வியாழக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

அரசு ஊழியா்களின் வாரிசுகளுக்கும் திருமண முன்பணம்: தமிழக அரசு உத்தரவு

அரசு ஊழியா்களுக்கு மட்டுமன்றி அவா்களது வாரிசுகளின் திருமணத் தேவைக்காகவும் முன்பணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் பிறப்பித... மேலும் பார்க்க

வார இறுதி: 1,030 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதியை முன்னிட்டு, ஜூலை 4, 5, 6 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) 1030 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: செ... மேலும் பார்க்க

சென்னையில் 31% கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? அரசுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில், சென்னையில் 31 சதவீத கொடிக் கம்பங்கள் மட்டுமே அகற்றப்பட்டது ஏன்? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழு... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ அணிகள் வெற்றி

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஓபி, ஐசிஎஃப், எம்ஓபி வைஷ்ணவ கல்லூரி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால்... மேலும் பார்க்க