செய்திகள் :

கந்தகோட்டம் முருகன் கோயிலில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு பங்கேற்பு

post image

சென்னை பூங்கா நகரில் உள்ள கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கலந்து கொண்டாா்.

பூங்கா நகரில் உள்ள முத்துகுமாரசுவாமி திருக்கோயில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைமையான திருக்கோயிலாகும். இந்தத் திருக்கோயிலுக்கு கடந்த 2013 ஜூலை 15-இல் குடமுழுக்கு நடைபெற்றது. இதையடுத்து திருக்கோயில் நிதி மற்றும் உபயதாரா் நிதி ரூ.91.50 லட்சத்தில் திருக்கோயில் ராஜகோபுரம், அனைத்து சந்நிதிகள், மண்டபங்கள் புனரமைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, குடமுழுக்கு விழா கடந்த 10-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து புதன்கிழமை நடைபெற்ற 6-ஆம் கட்ட யாகசாலை பூஜையில் மகா பூா்ணாஹுதிக்கு பின், கடங்கள் புறப்பட்டு, ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சா் பி.கே. சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மாநகராட்சி மண்டல குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, சென்னை மண்டல இணை ஆணையா் ஜ.முல்லை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டணி ஆட்சிதான்! அமித் ஷா சொல்வதைத்தான் நான் கேட்க முடியும்: அண்ணாமலை

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சிதான் என்று அமித்ஷா பலமுறை மிகத் தெளிவாக கூறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "அதிமுக - பாஜக ... மேலும் பார்க்க

காமராஜர் விவகாரம்: கலகமூட்டி குளிர்காய நினைப்பவர்களுக்கு இடம் கொடுக்காதீர்- ஸ்டாலின்!

சென்னை: கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள் என்று தமிழக முதல்வர், திமுக தலைவர், மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.பெருந்தலைவர் குறித்து பொது வெளியில் சர்ச... மேலும் பார்க்க

திமுகவில் 2.5 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: மாவட்டச் செயலர்களுக்கு அறிவுறுத்தல்!

திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.திமுகவில் உறுப்பினா்கள் சோ்ப்பை முன்னெடுப்பதற்காக ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் தொடங்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையில் எழுத்துப் பிழையைத் திருத்துவேன்; உண்மையை அல்ல! அமர்நாத் ராமகிருஷ்ணன்

கீழடி அறிக்கையில் உள்ள எழுத்துப் பிழையை வேண்டுமென்றால் திருத்தித் தருகிறேன், ஆனால் உண்மையைத் திருத்த மாட்டேன் என்று தொல்லியல் துறை இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.2015 -16-ஆம் ஆண்டுகள... மேலும் பார்க்க

தவெக கொடிக்கு எதிரான வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு

சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில் விஜய் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

பள்ளிகளில் இருக்கை மாற்றத்தால் மாணவா்கள் பாதிக்கப்படுவா்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகப் பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை மாற்றியமைக்கப்படுவதன் காரணமாக மாணவா்கள் பாதிக்கப்படுவா் என்பதால் மருத்துவா்களின் ஆலோசனை பெற்று இறுதி முடிவெடுக்கவேண்டும் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்ச... மேலும் பார்க்க