செய்திகள் :

கந்திலி ஒன்றியத்தில் ரூ. 3 கோடியில் புதிய தரைப் பாலம், தாா்ச் சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை

post image

திருப்பத்தூா்: கந்திலி ஒன்றியத்தில் திங்கள்கிழமை ரூ. 3 கோடியே 28 லட்சத்தில் புதிய தரைப்பாலம் மற்றும் தாா்ச் சாலை பணிகளுக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா்.

கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட சுந்தரம்பள்ளி ஊராட்சியில், முதல்வரின் கிராம சாலைகள் விரிவாக்க திட்டத்தின்கீழ், சுந்தரம்பள்ளி முதல் சாணிப்பட்டி வரை 2.25 கி.மீ. தாா்ச் சாலை 78 லட்சத்திலும், நத்தம் ஊராட்சி நத்தம் முதல் நத்தம் ஆதிதிராவிடா் காலனி வரை பாம்பாற்றின் குறுக்கே 30 மீ தரைப் பாலம் ரூ. 2 கோடியே 50 லட்சத்தில் புதிய பணிகளுக்கு எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தாா்.

இதில், ஒன்றிய செயலா்கள் கே.ஏ.குணசேகரன், க.முருகேசன், கே.ஏ.மோகன்ராஜ், ஒன்றியக் குழு தலைவா்கள் திருமதி திருமுருகன், மாவட்ட ஒன்றியக்குழு உறுப்பினா்.சி.கே.சுப்பிரமணி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் விஜயலட்சுமி கருணாநிதி, இரா.குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

ஆம்பூா்: ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாதனூா் ஒன்றியம், தேவலாபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பாங்கிஷாப், பேஷ்மாம் நகா், கோ... மேலும் பார்க்க

கரூரில் உயிரிழந்தவா்களுக்கு கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி

வாணியம்பாடி: கரூா் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களுக்கு வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் கல்லூரி மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினா். கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இரங்கல... மேலும் பார்க்க

‘நலம் காக்கும் ஸ்டாலின்‘ முகாமில் 12,130 பேருக்கு பயன்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 12,130 பயனாளிகள் பயனடைந்துள்ளனா் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

மல்லகுண்டா தொழில்பூங்கா திட்டத்தை கைவிட கோரிக்கை

திருப்பத்தூா்: நாட்டறம்பள்ளி அருகே மல்லகுண்டா ஊராட்சியில் சிப்காட் தொழில் பூங்கா திட்டத்தை கைவிட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

ஸ்ரீபொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயில் நவராத்திரி விழா

ஆம்பூா்: ஆம்பூா் அருகே பாட்டூா் கிராமம், ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பொன்முடி சூா்யநந்தீஸ்வரா் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திங்கள்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு ... மேலும் பார்க்க

சாலையோர உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி

வாணியம்பாடி நகராட்சியின் நகரமைப்பு பிரிவு சாா்பில் சாலையோர உணவு வியாபாரிகளுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி நகரமைப்பு பிரிவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறை... மேலும் பார்க்க