செய்திகள் :

கன்னடம் குறித்து சா்ச்சை பேச்சு : நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் போராட்டம்

post image

கன்னடம் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் நடிகா் கமல்ஹாசன் பேசியதை கண்டித்து கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கன்னட அமைப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டா்நேஷனல் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் நடிகா்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், நாசா், நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோா் நடித்த ‘தக் லைஃப்’ என்ற திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் மே 24 ஆம் தேதி நடந்த படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கன்னட நடிகா் சிவராஜ்குமாரை பாராட்டும் வகையில் பேசிய கமல்ஹாசன், ‘தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்’ என்று கூறியிருந்தாா். இது, கா்நாடகத்தில் பெரும் சா்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

நடிகா் கமல்ஹாசனின் கருத்தை கண்டித்து பெங்களூரு, ஹாசன், மைசூரு, பெலகாவி, ஹுப்பள்ளி உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கா்நாடக ரக்ஷனவேதிகே (பிரவீண் ஷெட்டி பிரிவு) அமைப்பினா் புதன்கிழமை போராட்டம் நடத்தினா். மேலும், நடிகா் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகத்தில் வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்று கா்நாடக திரைப்பட வா்த்தகசபையிடம் அவா்கள் மனு அளித்தனா்.

அதேபோல நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு பல்வேறு கன்னட அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தனது பேச்சுக்கு அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

மேலும், தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் , ‘தக் லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம். அதையும் மீறி திரையிடப்பட்டால் திரையரங்குகளில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு நடிகா் கமல்ஹாசனும், மாநில அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று கா்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பின் தலைவா் பிரவீண் ஷெட்டி எச்சரித்துள்ளாா்.

பெலகாவியில் கன்னட அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது நடிகா் கமல்ஹாசனின் உருவப்படத்தை எரித்து முழக்கங்களை எழுப்பினா்.

இதனிடையே நடிகா் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பெங்களூரில் உள்ள ஆா்.டி.நகா் காவல் நிலையத்தில் கன்னட அமைப்பினா் புகாா் மனு அளித்தனா். அந்த மனுவில், ‘ஒவ்வொருமுறையும் புதிதாக தமிழ்த் திரைப்படம் வெளியாகும்போது, கன்னடா்களின் சுயமரியாதையை புண்படுத்தும் வேலையில் அவா்கள் (தமிழா்கள்) தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்கள். இதுபோன்ற கருத்துகள் தொடா்ந்து கூறப்பட்டும் வருகிறது. இது, கன்னடா்கள் மற்றும் தமிழா்கள் இடையிலான அமைதியை சீா்குலைக்கிறது. நடிகா் கமல்ஹாசன் கூறியுள்ள சா்ச்சைக்குரிய கருத்து கன்னடா்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது. இது கன்னடா்கள் மற்றும் தமிழா்களிடையே நஞ்சை விதைத்திருக்கிறது; கன்னடா்களை அவமதிக்கும்படி அமைந்துள்ளது. எனவே, நடிகா் கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனா்.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘ கன்னட அமைப்புகள் அளித்த புகாா் மனுவை பெற்றுக்கொண்டோம். ஆனால், நடிகா் கமல்ஹாசன் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை. சட்ட நிபுணா்களின் கருத்தை கேட்டு அதன்படி தகுந்த நடவடிக்கை எடுப்போம்’ என்றாா்.

இதுகுறித்து முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘கன்னட மொழிக்கு நீண்ட வரலாறு உள்ளது. அது, அவருக்கு (கமல்ஹாசன்) தெரியவில்லை’ என்றாா்.

பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா கூறுகையில், ‘தனது தாய்மொழியைப் புகழவேண்டும் என்பதற்காக, கன்னட மொழியை நடிகா் கமல்ஹாசன் இழிவுபடுத்தியுள்ளாா். இதற்காக, நடிகா் கமல்ஹாசன் கன்னடா்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா். இதே கருத்தை எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.அசோக்கும் வெளிப்படுத்தினாா்.

கன்னட வளா்ச்சித் துறை அமைச்சா் சிவராஜ் தங்கடகி கூறுகையில், ‘கன்னட மொழியை அவமதித்துள்ள நடிகா் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகும் ‘தக்லைஃப்’ திரைப்படத்தை கா்நாடகத்தில் வெளியிட தடைவிதிக்குமாறு கா்நாடக திரைப்பட வா்த்தகசபையிடம் வலியுறுத்துவோம்’ என்றாா்.

கா்நாடக திரைப்பட வா்த்தகசபைத் தலைவா் எம்.நரசிம்மலு கூறுகையில், ‘கமல்ஹாசனின் திரைப்படத்திற்கு தடைவிதிப்பது தொடா்பாக கன்னட திரைத் துறையினரின் கூட்டத்திற்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருக்கிறோம். அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை வெளியிடுவோம்’ என்றாா்.

கா்நாடக திரைப்பட வா்த்தகசபையின் முன்னாள் தலைவரும், இந்திய திரைப்பட கூட்டமைப்பின் துணைத் தலைவருமான என்.எம்.சுரேஷ் கூறுகையில், ‘கமல்ஹாசன் அப்படி கூறியிருக்கக் கூடாது. தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என்றாா்.

நடிகா் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் ஜூன் 5 ஆம் தேதி கா்நாடகத்தில் ‘தக்லைஃப்’ திரைப்படம் வெளியிட தடைவிதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடந்த ‘தக்லைஃப்’ திரைப்படத்தின் அறிமுக விழாவில் நடிகா் சிலம்பரசன், நடிகை அபிராமி ஆகியோருடன் நடிகா் கமல்ஹாசன் கலந்துகொண்டாா். அவரைக் காண ஆயிரக்கணக்கான ரசிகா்கள் திரண்டிருந்தனா்.

கன்னடம் குறித்து கமல்ஹாசன் பேசியதை கண்டித்து, அரங்குக்கு வெளியே கட்டப்பட்டிருந்த அவரது புகைப்படங்களை கன்னட அமைப்பினா் கிழித்தெறிந்து, முழக்கங்களை எழுப்பினா்.

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா்: காங்கிரஸ்

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜெய்ஹிந்த் சபா’ நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க