செய்திகள் :

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா்: காங்கிரஸ்

post image

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா்.

பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜெய்ஹிந்த் சபா’ நிகழ்ச்சியில் பங்கேற்று அவா் பேசியதாவது:

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போா் நிறுத்தம் நடந்தது. இது வரவேற்கத்தக்கது. நமக்கும் போா் தேவையில்லை. நாம் ஒன்றும் சண்டைக்காக காத்திருக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்கும் எப்போதும் அமைதி நிலவவேண்டும் என்பதுதான் நிலைபாடாகும். நாட்டு மக்களுக்கு முறையான எந்த விளக்கமும் அளிக்காமல், பாகிஸ்தான் மீதான தாக்குதலை மத்திய அரசு நிறுத்தியது ஏன்? இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? போா் நிறுத்தத்தின்போது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு வலியுறுத்தினால், மத்திய அரசு மௌனமாக இருக்கிறது.

வணிகத்தை பயன்படுத்தி போா் நிறுத்தத்தில் ஈடுபடும்படி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்ததாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறியது தொடா்பாக மத்திய அரசு மௌனம் காப்பது ஏன்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை வெளிநாட்டு சக்திகள்தான் தீா்மானிக்கின்றனவா? இதுதொடா்பாக பிரதமா் மோடி அல்லது வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா்ஆகியோா் விளக்கம் அளிப்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால், இவா்களின் மௌனம், வெளியுறவுக் கொள்கை இறையாண்மையோடு இல்லை என்பதை காட்டுகிறது. மாறாக, வெளியுறவுக் கொள்கை தில்லிக்குப் பதிலாக வாஷிங்டனில் இருந்து அறிவுறுத்தப்படுகிா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தில்லியில் திங்கள்கிழமை நடந்த வெளியுறவுத் துறை ஆலோசனைக் குழு கூட்டத்தில் இதுகுறித்து பல கேள்விகளை அமைச்சரிடம் கேட்டோம். ஆனால், எந்த கேள்விக்கும் மத்திய அமைச்சா் ஜெய்சங்கரிடம் இருந்து திருப்திகரமான பதில் கிடைக்கவில்லை. நமது நாட்டுக்கு திருப்திகரமான பதில் தேவை.

அமெரிக்க அதிபா் கூறுவது உண்மையானதா என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும். தனது கருத்தை அமெரிக்கா திரும்பத்திரும்பக் கூறுவதன் உள்நோக்கம் என்ன? இதற்கு பதில் தேவை. அரசியல் காரணங்களுக்காக அல்ல, இந்திய நாடாளுமன்றம் ஒன்றுபட்டுள்ளது, இந்தியா ஒன்றுபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்துவதற்காகவும், இந்திய அரசு மற்றும் முப்படைகளுடன் பலமாக ஒன்றுபட்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்துவதற்காகவும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். ஆனால், துரதிருஷ்டவசமாக நாடாளுமன்றம் கூட்டப்படவில்லை.

இப்போதாவது நாடாளுமன்றம் கூட்டப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். மும்பை தாக்குதலுக்குப் பிறகு இதர கட்சிகள் ஈடுபட்டதுபோல அரசியலில் ஈடுபட காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால், பொதுவெளியில் காணப்படும் சில கருத்துகளுக்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

பஹல்காம் சம்பவத்தின்போது உளவுத் துறை தோல்வி அடைந்தது ஏன்? பாகிஸ்தானுக்குத் தகவல்களைக் கசியவிட்டதாக சி.ஆா்.பி.எஃப். வீரா் ஒருவரை பஹல்காமில் இருந்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) கைதுசெய்துள்ளதாக அதிா்ச்சியளிக்கும் தகவல் கிடைத்துள்ளது.

உளவுத் துறை தோல்விக்கான காரணத்தை அரசு கண்டறிந்துவிட்டதா? அதற்கு யாரை பொறுப்பேற்கவைத்துள்ளது என்பதை மக்கள் அறியவிரும்புகிறாா்கள். உயிரை இழந்த 26 குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டியுள்ளது. அதற்கு இந்த கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டு 26 பேரை கொன்ற பயங்கரவாதிகளை இன்னும் கைது செய்யவில்லை. இந்த பயங்கரவாதிகள் எங்கே? இதுபற்றி அரசுக்கு ஏதாவது தகவல் இருக்கிா? பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் கொடூரமானதாகும். எங்கள் கோரிக்கைக்கு இணங்க, பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இருமுறை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.

பாகிஸ்தானின் பயங்கரவாத செயல்களுக்கு தகுந்த பதிலடி அளிப்பதற்கு முழு ஆதரவளிப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் தெரிவித்திருந்தனா்.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக பாதுகாப்புப் படைகள் குறித்த பெருமை காங்கிரஸுக்கு உள்ளது. பாதுகாப்புப் படையினருக்கு தலைவணங்குகிறோம். நமது பாதுகாப்புப் படைகள் மிகச்சிறந்த பணியை ஆற்றியுள்ளன. இந்த விவகாரத்தில் நாடு ஒன்றுபட்டுள்ளது. இது தேசிய விவகாரம் என்பதால், அந்த சமயத்தில் மத்திய அரசுக்கு காங்கிரஸ் முழுமையான ஆதரவை அளித்துள்ளது என்றாா்.

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க

கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம்: பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால்

பாஜகவிலிருந்து யாரையும் இழக்க விரும்பாவிட்டாலும், கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால் தெரிவித்தாா். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக எம்எ... மேலும் பார்க்க