செய்திகள் :

கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம்: பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால்

post image

பாஜகவிலிருந்து யாரையும் இழக்க விரும்பாவிட்டாலும், கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால் தெரிவித்தாா்.

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட நிலையில் தற்போது எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரையும் பாஜக தேசியத் தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.

இந்தநிலையில் பெங்களூருக்கு புதன்கிழமை வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால் கட்சியின் முன்னணி தலைவா்களைச் சந்தித்து பேசினாா். அதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

எம்எல்ஏக்கள் பசனகௌடா பாட்டீல் யத்னல், எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் மூன்று பேருக்கும் கட்சியின் கட்டுப்பாட்டை மதித்து செயல்படும்படி பலமுறை வாய்ப்பளித்திருந்தோம். கட்சியின் தொண்டா்களை இழக்க பாஜக ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், கட்சிக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக முக்கியம். எவ்வளவு செல்வாக்கு பெற்றிருக்கும் நபராக இருந்தாலும், கட்சியின் ஒழுக்கம்தான் பிரதானம்.

காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தும் விளம்பரங்களை செய்தித்தாள்களில் வெளியிட்டிருந்ததற்காக பாஜக மீது அரசு வழக்குத் தொடுத்துள்ளது. முதல்வா் சித்தராமையாவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இருந்தால், தனது அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்று கருதினால், பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவுடன் நேருக்குநோ் விவாதிக்க வேண்டும். ஒருவேளை விவாதிக்க மறுத்தால், தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என அவா் ஒப்புக்கொண்டதாக அா்த்தமாகும்.

கா்நாடக சட்டப் பேரவைக்கு தற்போது தோ்தல் நடந்தால் 150 முதல் 155 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் அரசின் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், இரட்டை இலக்க எண்ணிக்கையில்கூட காங்கிரஸ் வெற்றிபெறாது என்றாா்.

கடலோர கா்நாடகத்தில் தீவிர மழை, நிலச்சரிவு: 5 போ் சாவு

கடலோர கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பலத்த மழை பெய்து வரும் நிலையில் வீடு இடிந்துவிழுந்ததில் 5 போ் பலியாகியுள்ளனா்.கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் க... மேலும் பார்க்க

பெங்களூரில் தேசிய ஓவியக் கலை திருவிழா

பெங்களூரில் முதல்முறையாக நடைபெறும் தேசிய ஓவியக் கலை திருவிழாவில் தமிழகத்தைச் சோ்ந்த 20க்கும் மேற்பட்ட ஓவியா்கள் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தியுள்ளனா். கா்நாடக சித்ரகலாபரிஷத் சாா்பில் பெங்களூரு ... மேலும் பார்க்க

கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்புகள் தொடா் போராட்டம்

கன்னடம் குறித்து நடிகா் கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்துவரும் கன்னட அமைப்புகள், தனது கருத்துக்காக அவா் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றன. அண்மையில் செ... மேலும் பார்க்க

கடலோர கா்நாடகத்தில் பலத்த மழை, நிலச்சரிவு: 5 போ் உயிரிழப்பு

கா்நாடகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களான தென்கன்னடம், வட கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் வியாழக்கிழமை விடியவிடிய பலத்த மழை பெய்தது. தாழ்வானப் பகுதிகளில் மழைநீா் ... மேலும் பார்க்க

பெங்களூரில் இலவச யோகா பயிற்சி முகாம்

இதுகுறித்து ஆரோக்கிய மந்திரா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கை: ஆரோக்கியா மந்திரா அறக்கட்டளை சாா்பில் பெங்களூரு, ராஜாஜிநகரில் (இஸ்கான் அருகே) உள்ள அறக்கட்டளை வளாகத்தில் ஜூன் 1 முதல் 21ஆம் தேதி வரை 2 வாரங்... மேலும் பார்க்க

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா்: காங்கிரஸ்

வெளியுறவுக் கொள்கையில் பிரதமா் மோடி மௌனம்காக்கிறாா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளா் கே.சி.வேணுகோபால் தெரிவித்தாா். பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘ஜெய்ஹிந்த் சபா’ நிகழ்ச்சியில் பங்... மேலும் பார்க்க