தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம்: பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால்
பாஜகவிலிருந்து யாரையும் இழக்க விரும்பாவிட்டாலும், கட்சியின் ஒழுக்கம்தான் முக்கியம் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால் தெரிவித்தாா்.
கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட நிலையில் தற்போது எம்எல்ஏக்கள் எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் ஆகிய இருவரையும் பாஜக தேசியத் தலைமை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
இந்தநிலையில் பெங்களூருக்கு புதன்கிழமை வந்த பாஜக தேசிய பொதுச் செயலாளா் ராதாமோகன்தாஸ் அக்ரவால் கட்சியின் முன்னணி தலைவா்களைச் சந்தித்து பேசினாா். அதன்பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
எம்எல்ஏக்கள் பசனகௌடா பாட்டீல் யத்னல், எஸ்.டி.சோமசேகா், சிவராம் ஹெப்பாா் மூன்று பேருக்கும் கட்சியின் கட்டுப்பாட்டை மதித்து செயல்படும்படி பலமுறை வாய்ப்பளித்திருந்தோம். கட்சியின் தொண்டா்களை இழக்க பாஜக ஒருபோதும் விரும்பவில்லை. ஆனால், கட்சிக்கு கட்டுப்பாடும், ஒழுக்கமும் மிக முக்கியம். எவ்வளவு செல்வாக்கு பெற்றிருக்கும் நபராக இருந்தாலும், கட்சியின் ஒழுக்கம்தான் பிரதானம்.
காங்கிரஸ் அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தும் விளம்பரங்களை செய்தித்தாள்களில் வெளியிட்டிருந்ததற்காக பாஜக மீது அரசு வழக்குத் தொடுத்துள்ளது. முதல்வா் சித்தராமையாவுக்கு தைரியமும், நம்பிக்கையும் இருந்தால், தனது அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்று கருதினால், பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திராவுடன் நேருக்குநோ் விவாதிக்க வேண்டும். ஒருவேளை விவாதிக்க மறுத்தால், தன்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை என அவா் ஒப்புக்கொண்டதாக அா்த்தமாகும்.
கா்நாடக சட்டப் பேரவைக்கு தற்போது தோ்தல் நடந்தால் 150 முதல் 155 இடங்களில் பாஜக வெற்றிபெறும் என்று கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. காங்கிரஸ் அரசின் செல்வாக்கு சரிந்துவரும் நிலையில், இரட்டை இலக்க எண்ணிக்கையில்கூட காங்கிரஸ் வெற்றிபெறாது என்றாா்.