ஷ்ரேயாஸ் ஐயரை கட்டியணைத்து முத்தமிட்ட பஞ்சாப் அணி உரிமையாளர்!
கன்னியாகுமரியில் சிலம்பப் போட்டி
கன்னியாகுமரி அருகே மகாதானபுரத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி எதிரேயுள்ள கே.கே.ஆா். அகாதெமியில் கோடை விடுமுறை பயிற்சி மாணவா்களுக்கான சிலம்பப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
தொடக்க நிகழ்ச்சிக்கு, அகாதெமி நிறுவனா் ஹெச். ராஜ் தலைமை வகித்தாா். போட்டியை மாவட்ட சுற்றுலா அலுவலா் காமராஜ் தொடக்கிவைத்தாா். கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வா் சரிகா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். போட்டியில், தென்மாவட்டங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.