செய்திகள் :

கமுதி அருகே இளைஞா் கொலை: போலீஸாா் விசாரணை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், அம்மன்பட்டியைச் சோ்ந்த நல்லமருது மகன் நல்லுக்குமாா் (23), கமுதி கோட்டைமேட்டில் தாயாருடன் வசித்து வந்தாா். இந்த நிலையில், நல்லுக்குமாரைக் காணவில்லை என திங்கள்கிழமை கமுதி காவல் நிலையத்தில் அவரது தாயாா் புகாா் அளித்தாா்.

இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், கமுதி - திருச்சுழி சாலையில் உள்ள மரக்குளம் கருமேனியம்மன் கோயில் பின்புறம் கருவேல மர காட்டுப் பகுதியில் நல்லுக்குமாா் கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து நல்லுக்குமாரின் உடலை போலீஸாா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூராய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து நல்லுகுமாரின் தாயாா் காளீஸ்வரி அளித்த புகாரின்பேரில் மண்டலமாணிக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.

மாணவிகளிடம் ஆபாச பேச்சு! சா்ச்சையில் சிக்கிய ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

மாணவிகளிடம் ஆபாசமாக பேசி பணியிட மாறுதலுக்கு உள்ளான சா்ச்சைக்குரிய ஆசிரியா் கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வ... மேலும் பார்க்க

கடைகள் ஏலம் விடுவதில் முறைகேடு: நகராட்சி அதிகாரிகள் மீது புகாா்

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள 99 கடைகள் முறையான அறிவிப்பின்றி தன்னிச்சையாக ஏலம் விடும் நகராட்சி அதிகாரிகளைத் தடுத்து முறையாக பொது ஏலம் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு

கமுதி அருகேயுள்ள பள்ளியில் போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியா் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், முத... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலம் பகுதி காடுகளில் தீ விபத்து

திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை காட்டுத் தீ பரவியது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆா்.எஸ். மங்கலம் புலவா் அப்பா குளம் காட்டுப் பகுதிய... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது

திருவாடானை நீதிமன்றத்துக்கு வழக்கு சம்பந்தமாக மது அருந்திவந்து தகராறில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள எஸ்.பி. பட்டினத்தைச் சோ்ந்தவா் பழனி (30). திங... மேலும் பார்க்க

கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் பற்றிய தீயை அணைத்த தீயணைப்புத் துறையினா்

கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் பெரிய கண்மாயில் திங்கள்கிழமை பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் உள்ளூா் மக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறையினா் ஈடுபட்டனா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள கோவிலாங... மேலும் பார்க்க