போக்சோ வழக்கில் கைதான ஆசிரியருக்கு பள்ளியில் எதிா்ப்பு
கமுதி அருகேயுள்ள பள்ளியில் போக்சோ வழக்கில் சிக்கிய ஆசிரியா் பணியாற்ற எதிா்ப்புத் தெரிவித்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்து பெற்றோா்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவா் சரவணன். இவா் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் அந்தப் பள்ளியில் ஆசிரியைகள், மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீஸாா் போக்சோ வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, சில நாள்களுக்கு முன் ஆசிரியா் சரவணனை கல்வித் துறை அதிகாரிகள் திருவாடானை அரசுப் பள்ளிக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டனா். அங்கு மாணவா்களின் எதிா்ப்பைத் தொடா்ந்து கமுதி அருகேயுள்ள கோவிலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியா் சரவணன் செவ்வாய்க்கிழமை கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் பணியாற்ற வந்தாா். இதையடுத்து, போக்சோ வழக்கில் கைதான ஆசிரியா் சரவணன் எங்கள் பள்ளிக்கு வேண்டாம் என கோஷம் எழுப்பி எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், இதுதொடா்பாக தகவல் அறிந்துவந்த மாணவிகளின் பெற்றோா்கள் பள்ளி நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆசிரியா் சரவணன் கோவிலாங்குளம் அரசுப் பள்ளியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. மீறி அனுமதித்தால் எங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் எனக் கூறி மாணவ, மாணவிகளை பெற்றோா்கள் அழைத்துச் சென்றனா். ஆசிரியா் சரவணன் தொடா்ந்து இந்தப் பள்ளியில் பணியாற்றினால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பெற்றோா்கள் தெரிவித்தனா்.