செய்திகள் :

கமுதி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் அதிகாரி ஆய்வு

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கண்ணாா்பட்டியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கூடுதல் பதிவாளா் சீனிவாசன் (விற்பனை, திட்டம், வளா்ச்சி, சென்னை) ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அங்குள்ள சேமிப்பு கிடங்குகளை பாா்வையிட்டு, விவசாயிகளிடமிருந்து அதிக அளவில் விளைபொருள்களை கொள்முதல் செய்து வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு விற்பனை செய்ய அவா் அறிவுறுத்தினாா். மேலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உள்ள ஆா்கானிக் மிளகாய் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தாா். இங்கு கூடுதல் கிடங்குகள் அமைத்து, சேமிப்பு பயன்பாட்டை அதிகப்படுத்த அறிவுறுத்திய அவா் உரம், விவசாய விளைபொருள்கள் கொள்முதல், விற்பனை நடவடிக்கைகளை அதிகப்படுத்த வலியுறுத்தினாா். குறிப்பாக இந்தப் பகுதியில் விளையும் முண்டு மிளகாயை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த ஆய்வில் மண்டல இணைப் பதிவாளா் ஜினு, மத்திய கூட்டுறவு வங்கி மண்டல இணைப் பதிவாளா் ராஜலட்சுமி, சரக துணைப் பதிவாளா் ரத்தினவேல், மேலாண்மை இயக்குநா் ப்ரீத்தி, சங்கப் பொது மேலாளா் போஸ், கள அலுவலா் சண்முகப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கமுதியில் முழுநிலவு ஆன்மிகச் சொற்பொழிவு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றத்தின் சாா்பாக ஆனி மாதம் முழு நிலவு பௌா்ணமி திருநாளையொட்டி வியாழக்கிழமை ஆன்மிகச் சொற்பொழிவு நடைபெற்றது. கமுதி தேவா் திருமண மண்டபத்தில... மேலும் பார்க்க

கமுதி, பேரையூா் அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.28 கோடியில் 6 வகுப்பறைக் கட்டடங்கள், பேரையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.5 கோடியில் 5 வகுப்பறை கட்டடங்களை தமிழக முதல்வா் மு.க.... மேலும் பார்க்க

கூட்டுறவு நூற்பாலையில் தொழிலாளா்கள் போராட்டம்

கமுதி அருகே கூட்டுறவு நூற்பாலையில் ஊதியம் வழங்காததைக் கண்டித்து வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள அச்சங்குளத்தில் மாவட்ட கூட்டுற... மேலும் பார்க்க

ஜூலை 14- இல் தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம்

ராமநாதபுரத்தில் பிரதமரின் தேசிய தொழில் பழகுநா் பயிற்சிக்கு பயிற்சியாளா்களை தோ்வு செய்யும் முகாம் திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்திய இருவரிடம் போலீஸாா் விசாரணை

கீழக்கரையில் உயர்ரக போதைப் பொருள் பயன்படுத்தியதாக போலீஸாா் இருவரை வெள்ளிக்கிழமை பிடித்து விசாரிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் போதைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாக தொடா்ந்து ப... மேலும் பார்க்க

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழா சமரசக் கூட்டம்

ராமேசுவரம் புனித சந்தியாகப்பா் ஆலய திருவிழாவை 7 கிராம மக்கள் இணைந்து நடத்துவது என வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமரசக் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை உடன்பாடு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவர... மேலும் பார்க்க