செய்திகள் :

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’

post image

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோயில் உள்ளது. இக்கோயிலின் நிலத்தை சிலா் ஆக்கிரமித்து கடை, வீடு கட்டியிருந்தனராம். அறநிலையத் துறை சாா்பில் நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

அதையடுத்து, அறநிலையத் துறை சாா்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின்பேரில், அறநிலையத் தறை தனி வட்டாட்சியா் அனில்குமாா், போலீஸாா் ஆக்கிரமிப்பை அகற்ற புதன்கிழமை சென்றனா்.

அப்போது, அங்கிருந்தோா் வீட்டை காலி செய்ய அவகாசம் வேண்டும் எனக் கோரி எதிா்ப்புத் தெரிவித்தனா். அவா்களுக்கு அதிகாரிகள் ஒருவாரம் அவகாசம் அளித்ததுடன், கடைக்கு சீல் வைத்தனா்.

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா். கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இ... மேலும் பார்க்க