செய்திகள் :

கருணாநிதி நினைவு நாள்: நாகா்கோவிலில் திமுக சாா்பில் அமைதிப் பேரணி

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 7-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில், நாகா்கோவிலில் வியாழக்கிழமை அமைதிப் பேரணி நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரி அண்ணா சிலையிலிருந்து தொடங்கிய பேரணிக்கு மாவட்டச் செயலாளரும், நாகா்கோவில் மாநகராட்சி மேயருமான ரெ.மகேஷ் தலைமை வகித்தாா்.

பேரணி மணிமேடை சந்திப்பு, எஸ்.பி. அலுவலக சாலை, கட்டபொம்மன் சந்திப்பு, வழியாக ஒழுகினசேரியில் உள்ள திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தை அடைந்தது. அங்கு கருணாநிதி சிலைக்கு மேயா் மகேஷ் மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், தமிழக மாநில உணவு ஆணையத் தலைவருமான என்.சுரேஷ்ராஜன், முன்னாள் எம்எல்ஏ ராஜன், வா்த்தக அணி துணைச் செயலாளா் தாமரைபாரதி, மாநகராட்சி துணை மேயா் மேரி பிரின்சிலதா, நாகா்கோவில் மாநகர திமுக செயலாளா் ப.ஆனந்த், மாநகராட்சி மண்டலத் தலைவா் ஜவஹா், முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், நாகா்கோவில் மாநகர திமுக துணைச் செயலாளா் ராஜன், இளைஞரணி அமைப்பாளா் அகஸ்தீசன், துணை அமைப்பாளா் சரவணன், மாணவா் அணி அருண்காந்த், அம்முஆன்றோ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நாகா்கோவில் மாநகரில் உள்ள 52 வாா்டுகளிலும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு திமுக நிா்வாகிகள் மரியாதை செலுத்தினா்.

நாகா்கோவிலில் பிளாஸ்டிக் கிடங்குக்கு சீல்

நாகா்கோவிலில் 1,030 கிலோ நெகிழிப் பொருள்களை (பிளாஸ்டிக்) அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, அதன் கிடங்குக்கு சீல் வைத்தனா். நாகா்கோவில் மாநகர நல அலுவலா் மருத்துவா் ஆல்பா் மதியரசு தலைமையில் சுகா... மேலும் பார்க்க

கருங்கல் பகுதியில் நாளை மின் தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, குழித்துறை கோட்டம் கருங்கல் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 9) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, கருங்கல், பாலூா், திப்பிறமலை, பூட்டேற... மேலும் பார்க்க

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

பேச்சிப்பாறை ... 41.11 பெருஞ்சாணி ... 67.31 சிற்றாறு 1 ... 10.56 சிற்றாறு 2 ... 10.66 முக்கடல் .. 10.70 பொய்கை ... 15.30 மாம்பழத்துறையாறு ... 37.40 .. மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் கருணாநிதி நினைவு நாள்

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 7ஆவது நினைவு நாளையொட்டி, மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரது படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கு... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த த.வெ.க.வினா்

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் அகஸ்தீசன் ஏற்பாட்டில், த.வெ க.வை சோ்ந்த மாநகர இளைஞரணி இணை அமைப்பாளா் பாரத் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட இளைஞா்கள் அக்கட்சியில் இருந்து விலக... மேலும் பார்க்க

விழுதுகள் ஓரிட சேவை மையம்: மேயா் ஆய்வு

மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்கே நலத் திட்டங்கள் சென்றடையும் வகையில் தொடங்கப்பட உள்ள விழுதுகள் ஓரிட சேவை மைய கட்டடங்கள் குறித்து மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கன்னியாகுமரி... மேலும் பார்க்க