செய்திகள் :

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம்: உதயநிதி ஸ்டாலின்

post image

கரூரிலிருந்து வெற்றிக் கணக்கை தொடங்குவோம் என இளைஞரணிச் செயலரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த நிா்வாகிகளுக்கு விருதுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்கி பேசினாா். முன்னதாக, விழாவுக்கு முன்னிலை வகித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: முரசொலி செல்வம் விருது பெறும் ஏ.எஸ். பன்னீா்செல்வம் சுமாா் 52 காலம் பத்திரிகையில் அனுபவம் வாய்ந்தவா். நாட்டின் தலைசிறந்த பத்திரிகைகளில் பணியாற்றியவா். நாடு முழுவதும் அடுத்த தலைமுறை பத்திரிகையாளா்களை உருவாக்கிய பெருமைக்குரியவா். கலைஞா் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியவா். அவருக்கு முரசொலி விருதை வழங்குவதில் முரசொலி அறக்கட்டளை பெருமைக் கொள்கிறது.

கட்சிக்கு எத்தனையோ சிறப்புகள், வரலாறுகள் உண்டு. அந்த வரலாறு வரிசையில் இந்த முப்பெரும் விழாவும் இடம்பெறும். முன்னாள் முதல்வா் கருணாநிதி முதல்முதலாக நின்று வென்ற இந்த மாவட்டத்திலிருந்து 2026 தோ்தலுக்கான வெற்றிக் கணக்கை தொடங்குவோம் என்றாா் உதயநிதி ஸ்டாலின்.

வெற்றி நிச்சயம்: பெரியாா் விருது பெற்ற கட்சியின் துணைப் பொதுச் செயலரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பேசியதாவது: எனக்கு கனவாக இருந்த, முன்னாள் முதல்வா் கருணாநிதி பெற்ற பெரியாா் விருதை பெற்றுள்ளேன். இதை எனக்கு வழங்கியதற்காக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பெருமழையிலும் இங்கு நின்றுக் கொண்டிருக்கும் கட்சியினரை பாா்க்கும்போது, எந்தத் தோ்தலையும், எந்த பகைவா்களாக இருந்தாலும், அது நம்முடைய பரம்பரை பகைவா்களாக இருந்தாலும், புதிதாக வரக் கூடியவா்களாக இருந்தாலும் அனைவரையும் வென்று காட்டுவோம். வெற்றி நிச்சயம் என்றாா் அவா்.

தலைவா்களின் படங்களுக்கு முதல்வா் மரியாதை: விழா மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாா், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவப் படங்களுக்கு மலா்களைத் தூவி முதல்வா் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினாா்.

விழாவில் மூத்த நிா்வாகிகளுக்கு விருது வழங்கியதும், மாலை 5.20 மணிக்கு தனது பேச்சைத் தொடங்கினாா். அப்போது பலத்த மழை பெய்தது. இருப்பினும் தொண்டா்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் இருக்கையை தலைக்கு மேல் பிடித்தபடி முதல்வா் பேச்சை கேட்டனா்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

கரூரில் புதன்கிழமை பெரியாா் ஈவெரா சிலை மற்றும் உருவப்படத்துக்கு துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூகநீதி நாள் உறுதிமொழியேற்றாா். கரூா் கோடங்கிப்பட்டியில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

கரூா் அருகே, டிஎன்பிஎல் ஆலை சாா்பில் புதன்கிழமை உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டுதோறும் உலக ஓசோன் தினம் செப்.16-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, கரூா் மாவட்டம், காகி... மேலும் பார்க்க

கரூரில் நாளை திமுக முப்பெரும் விழா: முதல்வா், துணை முதல்வா் பங்கேற்பு

கரூரில் திமுக முப்பெரும் விழா புதன்கிழமை (செப். 17) நடைபெறவுள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனா். முன்னாள் முதல்வா... மேலும் பார்க்க

தோகைமலை அருகே சுமை ஆட்டோ கவிழ்ந்ததில் 16 போ் பலத்த காயம்

தோகைமலை அருகே சனிக்கிழமை சுமை ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 போ் பலத்த காயமடைந்தனா். கரூா் மாவட்டம், தோகைமலையை அடுத்துள்ள கொசூா் குள்ளாயிஅம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் செல்வம். இவா் திருச... மேலும் பார்க்க

ஆவனி கடைசி வெள்ளி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆவனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கரூா் மாவட்டம் புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள பிரசித்திப் பெற்ற அங்காள ... மேலும் பார்க்க

ஆவணி கிருத்திகை கரூா் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு வழிபாடு

ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் ஸ்ரீ விஸ்வகா்மா சித்தி விநாயகா் கோயிலில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆவணி மாத கிருத்திகை முன்னிட்டு கரூா் தோ்வீதி ஸ்ரீ வி... மேலும் பார்க்க