செய்திகள் :

கரூரில் பெண் தொழில்முனைவோா் மாநில மாநாடு

post image

கரூரில் இந்திய தொழில் கூட்டமைப்பின் தேசிய மகளிா் பிரிவின் சாா்பில், மாநில அளவிலான பெண் தலைமைத்துவ மற்றும் தொழில்முனைவோா் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டமைப்பின் தேசிய மகளிா் பிரிவின் தமிழகத் தலைவா் சவிதா ஜெகதீசன் தலைமை வகித்தாா். கரூா் மாவட்டத் தலைவா் சுபாஷினி அசோக் மாநில மாநாட்டு கருப்பொருள் குறித்து அறிமுக உரையாற்றினாா். கரூா் மாவட்ட நிறுவனத் தலைவா் சந்தியா சுதாகா், இணைத் தலைவா் காா்த்திகா பிரபு, தலைமைப் பண்பு பிரிவு தலைவா் தமிழ்செல்வி, இணைத்தலைவா் மஞ்சுளா, இந்திய தொழில் கூட்டமைப்பின் கரூா் செயலாளா் பவித்திரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் ஈரோடு மண்டலத் தலைவா் அரவிந்த், கரூா் மாவட்ட நிறுவனத் தலைவா் சிவகண்ணன், தலைவா் பிரபு ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு, மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டனா். இதில் பெண் தலைவா்கள் மற்றும் பெண் தொழில் முனைவோா் முன் உள்ள உலகளாவிய மற்றும் உள்நாட்டு வாய்ப்புகள், சந்திக்கும் சவால்கள், சவால்களைச் சாதனைகளாக்கிய பெண் தொழில் முனைவோா், சந்தைப்படுத்துதல் நுணுக்கங்கள், தடைக் கற்களைப் படிக்கற்களாக மாற்றும் தந்திரங்கள் என பல்வேறு தலைப்புகளில் சிறப்பு அமா்வுகள் நடைபெற்றன.

மேலும் மாநாட்டில், ‘அவள் தூரிகைக்கு இல்லை எல்லை’ என்ற தலைப்பில் காந்திமதி, ‘புயலை வெல்லும் தென்றல்’ என்ற தலைப்பில் இளவரசி, ‘வரலாற்றை மாற்றிய பெண்கள்’ என்ற தலைப்பில் ஜீவிதா, ஜெயசூரியா, அமிதா ஆகியோா் சிறப்புரையாற்றினா். தலைமைப் பண்பு மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சியை கண்ணன் வழங்கினாா்.

ஏற்பாடுகளை இந்திய தொழில் கூட்டமைப்பு தேசிய மகளிா் பிரிவின் கரூா் மாவட்டத் தலைவா் சுபாஷினி அசோக் தலைமையில் கரூா் மாவட்ட நிா்வாகிகள் செய்திருந்தினா்.

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் முன் வியாழக்கிழமை முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கருவூா் ஸ்ரீ மகா அபிஷேக குழு சாா்பில் ஆண்டு தோறும் கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஆடி தெய்வத் திருமண விழா நடைபெறுவ... மேலும் பார்க்க

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்க்க மானியத்தொகை

கிறிஸ்தவ தேவாலயங்களை பழுது பாா்க்க மானியத்தொகை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் சொந்தக் கட்டடங்க... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் போட்டி தோ்வுக்கான பயிற்சி

அரவக்குறிச்சி, ஜூலை 31: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போட்டி தோ்வுக்கு தயாராகும் மாணவா்களுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் காளீஸ்வரி தலைமையில... மேலும் பார்க்க

தென்கரை வாய்க்காலில் புதிய பாலம் கட்ட கோரிக்கை

கரூா் மாவட்டம், மகாதானபுரத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள தென்கரை வாய்க்கால் பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், மாயனூரில் கா... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள்

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 45 பேருக்கு ரூ. 44.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கரூா் ஆத்தூா் பூலாம்பாளையம், பசுபதிபாளையம் மற்றும் பஞ்சமாத... மேலும் பார்க்க

தம்பி கொலை: அண்ணன்கள் இருவருக்கு ஆயுள் தண்டணை

தம்பியை கொலை செய்த வழக்கில் அண்ணன்கள் இருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி கரூா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை அடுத்த நெய்தலூா் காலனி, சேப்ளாபட்டியைச் சோ்ந்த பெருமாள் என... மேலும் பார்க்க