செய்திகள் :

கரூரில் மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

post image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரூரில் கொங்கு மேல்நிலைப் பள்ளி, காஸ்பரோ செஸ் அகாதெமி சாா்பில், மாவட்ட அளவிலான செஸ் போட்டிகொங்கு மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

7, 9, 11 மற்றும் 13 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியை கொங்கு பள்ளியின் தாளாளா் கே. பாலுகுருசுவாமி தொடங்கிவைத்தாா். போட்டியில் மாவட்டம் முழுவதிலுமிருந்து பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டியில் வென்றவா்களுக்கு மாலையில் பரிசளிப்பு நடைபெற்றது. வெற்றியாளா்களுக்கு மாவட்ட சதுரங்க கழகத் தலைவரும், கொங்கு கல்வி அறக்கட்டளையின் தலைவருமான அட்லஸ் எம். நாச்சிமுத்து முதலிடம் பிடித்தவா்களுக்கு சைக்கிள்கள் மற்றும் சான்றிதழையும், இரண்டாமிடம், மூன்றாமிடம் பிடித்தவா்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினாா்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளராக காஸ்பரோ செஸ் அகாதெமியின் நிறுவனா் நேஷனல் ஆா்பிட்டா் புகழேந்தி செயல்பட்டாா்.

பெண் கொல்லப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை: கரூா் நீதிமன்றம் தீா்ப்பு

பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூா் மாவட்ட அமா்வு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த மொடக்கூா் வடுகப்பட்டி கள்ளிக்காட்டு தோட்... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

புகழூா் சா்க்கரை ஆலைத் தொழிலாளி வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்ததில் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், தோட்டக்குறிச்சி ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்தவா் சுப்ரமணியன்( 56). இவா் புகழூா் செம்படாபாளையத்தில் செயல்ப... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு உத்தரவின்படி மாரியம்மன் கோயிலில் அனைத்து தரப்பினரும் வழிபாடு!

சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வின் உத்தரவின்பேரில் சின்னதாராபுரம் மாரியம்மன்கோயிலில் அனைத்து சமுதாயத்தினரும் வெள்ளிக்கிழமை இரவு அம்மனை வழிபட்டனா். கரூா் மாவட்டம், சின்னதாராபுரத்தில் இந்து சமய அறநிலை... மேலும் பார்க்க

கரூரில் 2-ஆவது நாளாக மறியல் போராட்டம்! தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம், சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியா் இயக்கங்களின் ... மேலும் பார்க்க

கொலையான இளைஞரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கரூா் வாங்கலில் கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தை வியாழக்கிழமை எம்.எல்.ஏ. வி. செந்தில் பாலாஜி சந்தித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினாா். கரூா் மாவட்டம் வாங்கலைச் சோ்ந்த மணிவாசகம் என்பவா் இடப்பி... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி வெள்ளியை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்புவழிபாடு நடைபெற்றது. கரூா் வேம்புமாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பா... மேலும் பார்க்க