செய்திகள் :

கரூர்: 'கழிவறைக்குச் செல்ல மாணவிகளுக்கு தனி பதிவேடு!' - சர்ச்சையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்

post image

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது... மீறி காலணி அணிந்து சென்றால், கழிவறையை மாணவிகளே சுத்தம் செய்து தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

letter

இது தவிர, மாணவிகள் பயன்படுத்தும் பொதுக் கழிவறைக்கு செல்லும்பொழுது தலைமையாசிரியர் அறையில் உள்ள ஒரு நோட்டுப் புத்தகத்தில், வருகை பதிவேடு போன்று கழிவறைக்கு செல்லும் நேரம், வெளியேறும் நேரம், கழிவறைக்கு செல்வதற்கான காரணம் ஆகிவற்றை மாணவிகள் எழுதி கையொப்பமிட வேண்டும் என மாணவிகளை வற்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. இதனால், அதிருப்தி அடைந்த மாணவிகள், கரூர் மாவட்ட ஆட்சியருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கும் புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளனர்.

அந்தப் புகாரில் தலைமையாசிரியரின் கட்டுப்பாடுகள் குறித்து பெற்றோரிடமும், மற்ற ஆசிரியர்களிடமும் தெரிவிக்கக் கூடாது என மாணவிகளை மிரட்டி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி கழிவறைக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காமல் மாணவிகளை, கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் கழிவறைக்கு வருகை பதிவேடு கட்டாயம் என தலைமை ஆசிரியர் மாணவிகளை நிர்பந்தப்படுத்தியதால், கடும் மன உளைச்சலில் மாணவிகளும், அவர்களின் பெற்றோரும் உள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து ,மாவட்ட ஆட்சியர், மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

letter

ஆனால், கரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடந்த வாரம் ஓய்வு பெற்றதால், புகார் மனு நடவடிக்கையின்றி கிடப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. தலைமையாசிரியர் அதே பள்ளியில், பணியாற்றி வருவதால், தேர்வு நேரத்தில் மாணவிகள் மற்றும் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர். மாணவிகள் கழிவறைக்குச் செல்ல அரசுப் பள்ளி தலைமையாசிரியர் தனி பதிவேடு பராமரிக்கும் விவகாரம் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்களை அதிர வைத்திருக்கிறது.

மதுரை: `பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம்'- `பகீர்' கிளப்பும் ரூ.24 கோடி மோசடி!

பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் எனக் கூறி 24 கோடி ரூபாய் மோசடி செய்ததாக போலீஸ்காரர் குடும்பத்தினர் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ள சம்பவம், மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்... மேலும் பார்க்க

தனிமையில் நெருக்கம்... வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்கும்படி மிரட்டிய டாக்சி டிரைவரை கொன்ற காதல் ஜோடி

பஞ்சாப்பை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேலை தேடி மும்பை வந்திருக்கிறார். அவர் நவிமும்பை உல்வே பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் வேலைக்கு சேர்ந்தார். கம்பெனிக்கு செல்ல சுரேந்திர பாண்டே என்பவரின் ஓலா டாக்சியை ... மேலும் பார்க்க

தென்காசி அருகே காரில் கஞ்சா கடத்தல்; பிரபல கஞ்சா ரவுடி கைது!

தென்காசி மாவட்டம் முழுவதும் கஞ்சாவிற்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் மீனாட்சிநாதன் ம... மேலும் பார்க்க

ராஜபாளையம்: `9-ம்வகுப்பு மாணவர் தூக்கிட்டு மரணம்' - போலீஸார் விசாரணை!

ராஜபாளையத்தில் 9-ம்வகுப்பு பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ரயில்வே பாலம் அருகே உள்ள ஸ்ரீரங்கபாளையம் தெருவைச... மேலும் பார்க்க

போக்சோ வழக்கு: பிரபல மத போதகர் தலைமறைவு.. கோவையில் நடந்தது என்ன?

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள ஜெப கூடத்தில் மத போதகராக உள்ளார். மேலும் இவர் தன்னுடைய இசைக் கச்சேரிகள் மூலம் கிறிஸ்துவ சமுதாயத்தில் நன்... மேலும் பார்க்க

தண்ணீர் பேரலுக்குள் 6 மாத குழந்தை மரணம்; தாயிடம் போலீஸார் தீவிர விசாரணை! - நடந்தது என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள குளவாய்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது: 29). இவர், மகராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குளவாய்ப... மேலும் பார்க்க