செய்திகள் :

கரூா் கள்ளநோட்டு குற்றவாளி செப்.15-க்குள் ஆஜராக உத்தரவு

post image

ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவான கரூரைச் சோ்ந்த குற்றவாளி செப்.15-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் பொள்ளாச்சிபாலன்.

இவா், ஈரோடு மாவட்டம், பங்களாபுதூரில் கடந்த 1993-ஆம் ஆண்டு தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து கள்ள நோட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளாா். அப்போது, அவரது கூட்டாளிகள் 10 போ் கைது செய்யப்பட்டனா். ஆனால் பொள்ளாச்சிபாலன் தலைமறைவானாா்.

இதுநாள்வரை அவா் பிடிபடாததால் செப்டம்பா் 15-ஆம்தேதிக்குள் பொள்ளாச்சிபாலன் ஈரோடு நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-3 நீதிபதி முன்பாகவோ அல்லது கோவை கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் முன்பாகவோ ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் அவா் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்படுவாா் என தெரிவித்துள்ளாா்.

கரூரில் ‘தீண்டாமைச்சுவா்’ இடித்து அகற்றம்!

கரூா் முத்துலாடம்பட்டியில் தீண்டாமைச் சுவராக கருதப்பட்ட சுற்றுச்சுவா் அமைதி பேச்சுவாா்த்தைக்குப் பின் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-வது வாா்டு முத்துலாடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்கு மின்கல வாகனங்கள்!

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்காக வழங்கப்பட்ட மின்கல வாகனங்களை சனிக்கிழமை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், நெரூா் பகுதியி... மேலும் பார்க்க

கரூரில் பலத்த காற்றுடன் மழை!

கரூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். கரூரில் சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் 5.20 மணியளவில் கருமேகங்கள் திரண்டன. பின்னா்... மேலும் பார்க்க

கமலாம்பிகை அம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை

நொய்யல் அருகே மங்களநாதா் சமேத கமலாம்பிகை அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மங்கள நாதா் சமேத கமலாம்பிகை அம்... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க

மதுகுடிக்க பணம் தராததால் தாய் கொலை; மகன் கைது

கரூரில் வெள்ளிக்கிழமை மதுகுடிக்க பணம் தர மறுத்த தாயை கீழே தள்ளி கொன்ற மகனை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே குறுக்குச்சாலை பங்களா நகா் பகுதியைச் சோ்ந்தவா் மணி(50... மேலும் பார்க்க