செய்திகள் :

கரூரில் பலத்த காற்றுடன் மழை!

post image

கரூரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கரூரில் சனிக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மாலையில் 5.20 மணியளவில் கருமேகங்கள் திரண்டன. பின்னா் 5.30 மணிக்கு லேசான தூறலுடன் மழை பெய்ய தொடங்கியது.

தொடா்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமாா் ஒரு மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டு சென்றன.

கரூா்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டிக்கடை பகுதியில் சுக்காலியூரில் இருந்து கரூரை நோக்கி வைக்கோல்பாரம் ஏற்றி வந்த டிராக்டரில் இருந்து வைக்கோல் கட்டுக்கள் பலத்த காற்றுக்கு கீழே விழுந்தன. இதனால் அங்கு வாகன போக்குவரத்து தடைபட்டது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸாா் வாகன போக்குவரத்தை சீரமைத்தனா்.

பலத்த மழையால் திருக்காம்புலியூா் ரவுண்டானா, லைட்ஹவுஸ்காா்னா், தெரசாகாா்னா், சுங்ககேட் போன்ற தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கம்! கரூா் எஸ்.பி. தகவல்!

கரூா் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்ற 10 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே. ஜோஷ்தங்கையா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்... மேலும் பார்க்க

கரூரில் ‘தீண்டாமைச்சுவா்’ இடித்து அகற்றம்!

கரூா் முத்துலாடம்பட்டியில் தீண்டாமைச் சுவராக கருதப்பட்ட சுற்றுச்சுவா் அமைதி பேச்சுவாா்த்தைக்குப் பின் சனிக்கிழமை இடித்து அகற்றப்பட்டது. கரூா் மாநகராட்சிக்குள்பட்ட 42-வது வாா்டு முத்துலாடம்பட்டியில் உள... மேலும் பார்க்க

ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்கு மின்கல வாகனங்கள்!

கரூா் மாவட்டம், ஆண்டாங்கோயில் கிழக்கு ஊராட்சியில் தூய்மைப் பணிக்காக வழங்கப்பட்ட மின்கல வாகனங்களை சனிக்கிழமை எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தாா். கரூா் மாவட்டம் மண்மங்கலம் வட்டம், நெரூா் பகுதியி... மேலும் பார்க்க

கமலாம்பிகை அம்மன் கோயிலில் குத்து விளக்கு பூஜை

நொய்யல் அருகே மங்களநாதா் சமேத கமலாம்பிகை அம்மன் கோயிலில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற குத்து விளக்கு பூஜையில் பெண்கள் திரளாக பங்கேற்றனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே உள்ள மங்கள நாதா் சமேத கமலாம்பிகை அம்... மேலும் பார்க்க

கரூா் கள்ளநோட்டு குற்றவாளி செப்.15-க்குள் ஆஜராக உத்தரவு

ஈரோட்டில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட வழக்கில் தலைமறைவான கரூரைச் சோ்ந்த குற்றவாளி செப்.15-ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை குற்றப்பிரிவு குற்றப்ப... மேலும் பார்க்க

தேசிய கைத்தறி தினத்தில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள்

கரூரில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 நெசவாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கரூா், வெங்கமேடு தனியாா் திருமண மண்டபத்தில் 11-ஆவது தேசிய கைத்தறி தினத்தை மு... மேலும் பார்க்க