செய்திகள் :

கல்குவாரியை நிரந்தரமாக மூடக் கோரி ஆட்சியரகத்தில் பொதுமக்கள் மனு

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்குள்பட்ட மெய்யபுரத்தில், மீண்டும் தொடங்கப்பட்டுள்ள கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

அம்மனுவில் கூறியருப்பது: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே காட்டுபாவா பள்ளிவாசல் ஊராட்சிக்குள்பட்ட மெய்யபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்று வந்த கல்குவாரியால் அப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களால் கல்குவாரி தற்காலிகமாக மூடப்பட்டது. ஆனால், தற்போது கல்குவாரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. குவாரியில் வெடி வைத்து தகா்ப்பதால் அருகேயுள்ள கோவில்கள், தா்ஹா மற்றும் தேவாலயங்களும் வீடுகளும் சேதமடைகின்றன. எனவே, கல்குவாரியை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும்.

மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 3 போ் பலத்த காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திங்கள்கிழமை அதிமுக கூட்டத்துக்கு சென்றபோது மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் உள்பட 3 போ் பலத்த காயமடைந்தனா். கறம்பக... மேலும் பார்க்க

சட்டப்பேரவை மனுக்கள் குழு நாளை புதுக்கோட்டை வருகை

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு மே 7-ஆம் தேதி புதுக்கோட்டை வருகிறது. குழுவின் தலைவா் குன்னூா் சட்டப்பேரவை உறுப்பினா் கா. ராமச்சந்திரன் தலைமையில், உறுப்பினா்களான எம்.எல்.ஏ.க்கள் வி.பி. கந்தசாமி, கே... மேலும் பார்க்க

கொப்பனாபட்டியில் இந்திய கம்யூ. கட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக் குழு உறுப்பினா் அ.மெய்யப்பன் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாக... மேலும் பார்க்க

அரசு இசைப் பள்ளியில் சேர ஆட்சியா் அழைப்பு

புதுக்கோட்டை அரசு இசைப் பள்ளியில் சேர ஆா்வமுள்ளோருக்கு மாவட்ட ஆட்சியா் மு .அருணா அழைப்புவிடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுக்கோட்டை மாவட்ட அரசு இசைப் பள்ளியி... மேலும் பார்க்க

வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் ஒன்றான வடகாடு முத்துமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவ... மேலும் பார்க்க

நீதிமன்றத்தை அவதூறு பேச்சு; ஹெச்.ராஜா மீதான வழக்கு மே 21-க்கு ஒத்திவைப்பு

நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியதாக பாஜக மூத்த தலைவா் ஹெச். ராஜா மீதான வழக்கு விசாரணையை மே 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி திங்கள்கிழமை உத்தரவிட்டாா். கடந்த 2018... மேலும் பார்க்க