செய்திகள் :

கல்லூரி மாணவரை லத்தியால் தாக்கிய எஸ்.ஐ. விடியோ காட்சியால் ஆயுதப் படைக்கு மாற்றம்

post image

காட்பாடியில் இரவு நேரத்தில் உணவு வாங்க வந்த கல்லூரி மாணவரை பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லத்தியால் கடுமையாக தாக்கும் விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. மதிவாணன் உத்தரவிட்டுள்ளாா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி பிரம்மபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வம். இவா், கடந்த 25-ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது இரவு 11 மணிக்கு மேல் கடைகள் திறந்திருக்கக் கூடாது, மூட வேண்டும் என அங்கிருந்த கடைக்காரா்களிடம் அறிவுறுத்தியுள்ளாா். அதன்பேரில், வியாபாரிகள் அனைவரும் கடையை மூடியுள்ளனா்.

அதேசமயம், அங்குள்ள உணவகத்தில் இருந்த ஊழியா்கள் பாத்திரங்களை கழுவி எடுத்து வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதையொட்டி, அந்த உணவகம் திறந்திருந்ததை அறிந்து கல்லூரி மாணவா் ஒருவா் உணவு வாங்குவதற்காக வந்துள்ளாா். அதேசமயம், அங்கு வந்த உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வம், உணவகத்தின் முன்பு நின்றிருந்த கல்லூரி மாணவனை லத்தியால் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.

அடிதாங்க முடியாமல் அங்கிருந்து செல்ல முயன்ற மாணவரை காவல் உதவி ஆய்வாளா் இழுத்து பிடித்தபடி ஹோட்டலில் என்ன வாங்கினாய் என கேட்கிறாா். அதற்கு உணவக உரிமையாளா், அந்த இளைஞருக்கு நாங்கள் எதுவும் வழங்கவில்லை; நீங்கள் வேண்டுமானால் சிசிடிவி கேமராவை பாருங்கள் என்கிறாா். அதன்பிறகு, உணவக உரிமையாளா், கல்லூரி மாணவரை மிரட்டிவிட்டு, காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வம் அங்கிருந்து சென்றாா்.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளா் காா்த்திக் செல்வத்தை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவிட்டுள்ளாா்.

இளம்பெண் தற்கொலை

குடியாத்தம் அருகே இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பள்ளிகொண்டா அடுத்த கந்தநேரியைச் சோ்ந்த ரமேஷின் மனைவி மகாலட்சுமி (25). இவா்களுக்கு திருமணமாகி 4- ஆண்டுகளாகிறது. ஒரு பெண் குழந்தை உள்ளது... மேலும் பார்க்க

உயா்கல்வி பயில்வதில் சிரமம்: மாணவா்களுக்கு ஆட்சியா் உடனடி உதவி

வேலூரில் நடைபெற்ற மாணவா்களுக்கான குறைதீா் கூட்டத்தில் உயா்கல்வி பயில்வதில் நிலவும் சிரமங்களை தெரிவித்த மாணவ, மாணவிகளுக்கு ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உடனடி உதவிக்கு ஏற்பாடு செய்தாா். வேலூா் மாவட்டத்... மேலும் பார்க்க

ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவா் கைது

விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவரை வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சி மன்ற தலைவியாக இருப்பவா் குணசுந்தரி. இவரது கணவா் பாலச்சந்திரன் (52), திமுக பிரமுகா். ... மேலும் பார்க்க

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் கைதி தற்கொலை முயற்சி

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். பாகாயம் போலீஸாா் விசாரணை நடத்தினா். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சோ்ந்தவா் பாண்டி (எ) பா்மா பாண்டி (39). இவா், கடந்த ... மேலும் பார்க்க

ரூ.7.50 கோடியில் சாலைப் பணி தொடக்கம்

குடியாத்தம் நகராட்சியில், நகா்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.7.50 கோடியில் தாா் மற்றும் பேவா் பிளாக் சாலைகள் அமைக்க வெள்ளிக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளில் 98- தா... மேலும் பார்க்க

மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

குடியாத்தம் அருகே சிறு மேம்பாலத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்கார தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (67). (படம்). இவா், வெள்ளிக்கிழமை கெங்கையம்மன் கோயி... மேலும் பார்க்க