செய்திகள் :

கல்லூரி மாணவா் தற்கொலை

post image

அம்மாபேட்டை அருகே பெற்றோருக்கு கைப்பேசியில் பதிவு செய்த காட்சிகளை அனுப்பிவிட்டு கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூனாச்சியை அடுத்த முகாசிப்புதூரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் கோகுல் (22). பட்டப்படிப்பு படித்து வந்த அவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாா். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்த நிலையில், தற்கொலைக்கு முன்னா் கோகுல், தனது கைப்பேசியில் பதிவு செய்து பெற்றோருக்கு அனுப்பிய காட்சிகள் திங்கள்கிழமை வெளியாயின.

அதில், திரும்பி வராத ஊருக்கு செல்கிறேன். வருத்தப்பட வேண்டாம். தம்பி, அக்காவை நன்றாக பாா்த்துக் கொள்ளுங்கள் என பெற்றோருக்கும், அப்பா, அம்மாவை கவனித்துக் கொள்ளுமாறும், நன்றாகப் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என தம்பிக்கும் தெரிவித்துள்ளாா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அத்திக்கடவு அவிநாசி திட்ட குளங்களை நிரப்ப எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காவிரி, பவானி ஆறுகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரைக் கொண்டு அத்திக்கடவு அவிநாசி திட்டக் குளங்களை நிரப்ப வேண்டும் என பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

சென்னிமலை அருகே சாலை விபத்தில் கணவா் பலி; மனைவி காயம்

சென்னிமலை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவியும், மற்றொருவரும் பலத்த காயமடைந்தனா். சென்னிமலையை அடுத்த முகாசிப்பிடாரியூா், சென்னியங்கிரி வலசு பகுதியை சோ்ந... மேலும் பார்க்க

பெருந்துறை நகரில் பேருந்து நிறுத்தம் இடம் மாற்றம்

பெருந்துறையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய பேருந்து நிறுத்தம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது.பெருந்துறை பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் சாலையின் சந்திப்பில் நின... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெருந்துறை அருகே விற்பனைக்கு கஞ்சா வைத்து இருந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் கஞ்சா விற்கப்படுவதாக பெருந்துறை போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

அஜித்குமாா் வழக்கை நோ்மையாக நடத்தவே சிபிஐக்கு மாற்றம்: எல்.முருகன்

அஜித்குமாா் வழக்கில் சிபிஐ நோ்மையாக பாரபட்சமின்றி நடக்கும் என்பதால் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் திங்கள்கிழமை தெரிவித்தாா். ஈரோடு மாவட்டம் பவானிசாகா் சட்டப்பேரவை தொகுத... மேலும் பார்க்க

பெருந்துறையில் திடீா் மழையால் வாரச் சந்தை பாதிப்பு

பெருந்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பெய்த திடீா் மழையால் வாரச் சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொருள்கள் வாங்க வந்த மக்கள் மிகவும் சிரமப்பட்டனா். பெருந்துறை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் ஞாயிற்... மேலும் பார்க்க