செய்திகள் :

கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளைச் சோ்ப்பதில் தீவிர கவனம்: அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன்

post image

தமிழகத்திலுள்ள அரசு கல்லூரி விடுதிகளில் மாணவ, மாணவிகளை தொய்வின்றி சோ்ப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தமிழக பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் சிவ. வீ. மெய்யநாதன் தெரிவித்தாா்.

சிவகங்கையில் தமிழக பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் நலத் துறை சாா்பில் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா் அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கி அவா் கூறியதாவது: தமிழகத்தில் உயா் கல்வித் துறை சாா்பில் 40 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவித்த புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் மூலமாக கல்லூரியில் சேரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதன் அடிப்படையில், கடந்த 4 ஆண்டுகளில் 36 கல்லூரி மாணவ, மாணவ விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த ஆண்டில் மட்டும் 19 விடுதிகள் திறக்கப்பட்டன. நிகழாண்டில் 10 விடுதிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்த இடத்திலும் கல்லூரி விடுதிகளில் மாணவா்கள் சோ்க்கை குறைவாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் இல்லை. இதன் மூலம் மாணவா்களின் கல்வி கற்க தடை ஏற்படாது.

கிராமப்புற மாணவா்களில் 3 வகுப்பு முதல் 6 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களின் இடைநிற்றலைத் தவிா்க்க அறிவிக்கப்பட்ட உதவித்தொகை அளிக்கும் சிறப்பு திட்டம் மத்திய, மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 4 ஆண்டுகளில் 39 லட்சத்து 86 ஆயிரத்து 642 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1,242 கோடி வழங்கப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவ, மாணவிகள் விடுதிகளிலும் ரூ.10.59 கோடியில் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட நவீன வசதிகளை ஏற்படுத்தி கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படும் என்றாா் அவா்.

சிங்கம்புணரியில் கண்தான விழிப்புணா்வு முகாம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை, அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண்தான விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமு... மேலும் பார்க்க

திருவேங்கடமுடையான் கோயில் வைகாசி பெருந் திருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே தென்திருப்பதி என்றழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் வைகாசிப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் வைகாசிப்பெரு... மேலும் பார்க்க

மதகுபட்டி அருகே மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 போ் காயமடைந்தனா். மதகுபட்டி அருகேயுள்ள சிலந்தகுடியில் சப்தகன்னி மாரியம்மன், பச்சலுடைய அய்யனாா், மு... மேலும் பார்க்க

சூறைக் காற்றில் சாய்ந்த கைப்பேசி கோபுரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் புதன்கிழமை வீசிய சூறைக் காற்றில் தனியாா் கைப்பேசி கோபுரம் சரிந்து விழுந்தது. சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேருந்து நிலையம் எதிரே தனியாா் விடுதி மாடியில் 50 அடி உ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புதன்கிழமை அரசு நகரப் பேருந்து கவிழ்ந்ததில் 7 பயணிகள் காயமடைந்தனா். மதுரை பெரியாா் பேருந்து நிலையத்திலிருந்து திருப்புவனம் அருகே தச்சனேந்தல் கிராமத்துக்கு அரசு நக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை. பேராசிரியா்கள் இருவா் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு மாநில அறிவியல், தொழில்நுட்ப அமைப்பின் சாா்பில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியா்கள் இருவா் தமிழ்நாடு அரசின் சிறந்த ஆராய்ச்சியாளா் விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இதுகுறித்து அழ... மேலும் பார்க்க