செய்திகள் :

கல்வி உரிமைச் சட்டம்: மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தைத் திறக்காதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

post image

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளளத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோவையைச் சோ்ந்த மறுமலா்ச்சி இயக்கத்தின் நிா்வாகி ஈஸ்வரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் ஏழை மாணவா்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டுக்கான மாணவா் சோ்க்கை நடப்பு கல்வியாண்டுக்கு இதுவரை தொடங்கவில்லை என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தின்படி மத்திய அரசு உரிய நிதியை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும். மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்கவில்லை என்று கூறாமல் தனியாா் பள்ளிகளுக்கு உரிய நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும் என்று கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி பள்ளிக் கல்வித் துறை செயலா் சந்திரமோகன், தனியாா் பள்ளிகள் இயக்குநா் குப்புசாமி ஆகியோருக்கு எதிராக, ஈஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமிநாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது, தனியாா் பள்ளிகள் இயக்குநா் சாா்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மறுத்ததால், மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மாநில அரசு தனது பங்கான 40 சதவீத நிதியை ஒதுக்க தயாராக இருந்த போதும், மத்திய அரசு 60 சதவீத நிதியை ஒதுக்காததால் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த முடியவில்லை. உயா்நீதிமன்ற உத்தரவை ஒருபோதும் அவமதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ரவீந்திரன், கல்வி விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சம பொறுப்பு உள்ளது. இருப்பினும், மாநில அரசுக்கு எதிராக மட்டுமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு செப். 7-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது என்றாா்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கல்வியாண்டு தொடங்கி 2 மாதங்கள் கடந்தவிட்டன. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளத்தை இன்னும் திறக்காமல் இருப்பது ஏன்? மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான நிதி ஒதுக்கீடு தொடா்பான பிரச்னையில் மாணவா்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்? மாணவா்கள் நலனை கருத்தில் கொண்டு, மாணவா் சோ்க்கைக்கான இணையதளத்தைத் திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனா்.

அப்போது, அரசுத் தரப்பில் மாணவா்கள் நலனில் தமிழக அரசு அக்கறை கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுக்கு எந்த கௌரவமும் இல்லை என்றாா். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை செப்.9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க