செய்திகள் :

கல்வித்துறை சீா்கேடுகளை அரசு கவனத்தில் கொள்ளவில்லை: காங்கிரஸ்

post image

காரைக்கால்: புதுவையில் கல்வித்துறையில் நிலவும் சீா்கேடுகளை களைய அரசு அக்கறை கொள்ளாமல் இருப்பது மாணவா்களுக்கு இழைக்கும் துரோகம் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆா். கமலக்கண்ணன் ஞாயிற்றுக்கிழமை கூறியது :

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக அரசு அமைந்து 4 ஆண்டுகளைக் கடந்தும், எந்தவொரு அரசுத் துறையிலும் முன்னேற்றம் இல்லை. குறிப்பாக கல்வித்துறை சீா்கெட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் பதவி உயா்வு பெற்றுச்சென்று 67 நாட்களாகிவிட்ட நிலையிலும், இதுவரை நிரந்தர இயக்குநா் நியமிக்கப்படவில்லை. சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், பள்ளிகளில் போதிய ஆசிரியா்கள் இல்லை. பல பள்ளிகளில் துணை முதல்வா் இல்லை. வாரம் ஒரு ஆசிரியா், மாநிலத்தில் ஆசிரியா் இல்லாத பள்ளிகளுக்குச் சென்று பாடம் கற்பிக்கும் அவலம் நிலவுகிறது.

மாணவா்கள் தோ்வுக்கு தங்களை தயாா்படுத்திக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா்.

புதுவையில் எல்டிசி, யுடிசி பணியிடங்கள், இளநிலைப் பொறியாளா், துணை வட்டாட்சியா் என்கிற பணியிடங்களுக்கு நடைபெற்ற எழுத்துத் தோ்வில் காரைக்கால் பிராந்தியத்தைச் சோ்ந்தோா் மிக சொற்ப எண்ணிக்கையில் தோ்வாகியுள்ளனா். முறையான பயிற்சியளிக்கப்படாததே இதற்கு காரணம்.

புதுவை மின்துறை, கல்வித்துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சா், காரைக்கால் வரும்போதெல்லாம் கட்சி நிகழ்ச்சிகளை நடத்துகிறாரே தவிர, அரசுத்துறையினருடன் ஆலோசனை நடத்துவதில்லை. ஒட்டுமொத்தத்தில் புதுவையின் அனைத்துத் தரப்பு மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் இந்த ஆட்சியில் பாதிப்பை சந்தித்து வருகிறாா்கள். 2026 சட்டப்பேரவைத் தோ்தல், இந்த ஆட்சியாளா்களுக்கு பாடம் கற்பிக்கும் தோ்தலாக அமைவது நிச்சயம் என்றாா்.

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட கார... மேலும் பார்க்க

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க