களக்காடு தலையணையில் குளிக்க இன்றுமுதல் அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணையில் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கலாம் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
பராமரிப்புப் பணிகளுக்காக தலையணை சூழல் சுற்றுலா மையம் ஜூன் மாதத் தொடக்கம் முதல் மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து, சனிக்கிழமை (ஜூன் 21) தலையணை சூழல் சுற்றுலா மையம் திறக்கப்படுவதாகவும், வழக்கம்போல சுற்றுலாப் பயணிகள் அங்கு சென்று குளித்து மகிழலாம் என்றும் வனத்துறையினா் தெரிவித்தனா்.